MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நீட் தேர்வு விவகாரம்: மோடிக்கு ஸ்டாலின் அவசரக் கோரிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நீட் தேர்வு விவகாரம்: மோடிக்கு ஸ்டாலின் அவசரக் கோரிக்கை!

தமிழ்நாடு

நீட் தேர்வு விவகாரம்: மோடிக்கு ஸ்டாலின் அவசரக் கோரிக்கை!

Admin
Last updated: மே 15, 2026 9:09 காலை
Admin
Share
SHARE

2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும், 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை மாநில அரசுகளே நிரப்பிக்கொள்ள அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வில் உள்ள அமைப்புரீதியான குறைபாடுகள் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மிகுந்த கவலையோடு இந்தக் கடிதத்தை எழுதுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்த முறைகேடுகளில் ஈடுபட்டதாக, பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர். சிபிஐ விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 22.8 லட்சம் மாணவர்கள் அடுத்து என்ன நடக்கும் என்ற தவிப்பில் உள்ளனர்.

இதுபோன்ற முறைகேடுகள் நடப்பது இது முதல்முறையல்ல. 2015-ஆம் ஆண்டு AIPMT தேர்வில் புளுடூத் மூலம் வினாத்தாள் கசிவு நடந்தது. உச்சநீதிமன்றம் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தியது. 2016-ஆம் ஆண்டு நீட் இரண்டாம் கட்டத்திலும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தன. 2017-ஆம் ஆண்டில் ஆள்மாறாட்டப் புகார்கள், மொழிபெயர்ப்புப் பிழைகள் எனப் பல பிரச்சனைகள் எழுந்தன. 2020, 2021-ஆம் ஆண்டுகளில் போலித் தேர்வர்கள் தேர்வெழுதியது, 2022-ஆம் ஆண்டிலும் ஆள்மாறாட்ட முறைகேடு, 2024-ஆம் ஆண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள், கருணை மதிப்பெண்கள், ஒரே மையத்தில் பல டாப் மாணவர்கள், 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை பணம் பெற்று வினாத்தாள் கசிவு எனப் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறைந்தது 155 மாணவர்கள் இந்த மோசடியால் பயனடைந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக மோசடி நடந்துள்ளது.

நீட் தேர்வு, தொடக்கம் முதலே ஏழை, கிராமப்புற, அரசுப் பள்ளி, தமிழ்வழி மாணவர்களுக்கு எதிராகவே இருந்து வருவதாக ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். தகுதி என்ற பெயரில், பணம் கொழிக்கும் வணிகமாகவும், பயிற்சி மையங்களால் உந்தப்பட்ட பணக்காரர்களுக்கான தேர்வாகவும் நீட் மாறிவிட்டது. பயிற்சி மையத் தொழிலில் 70 ஆயிரம் கோடி ரூபாய் புரள்கிறது. பல லட்சம் செலவழித்துப் பெறும் சிறப்புப் பயிற்சி இன்றி நீட் தேர்வில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இது கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பெரும் தடைக்கல்லாக இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை முறை சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வாய்ப்புகளை உறுதி செய்தது. நீட் இந்த முறையைச் சீர்குலைக்கிறது. நீட் தேர்வு முறை உருவாக்கும் மன அழுத்தத்தால் மாணவர்களின் உயிரும் பறிபோகிறது. முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வை எதிர்த்ததாகவும், மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் மாநில உரிமைகளை மீட்க வலியுறுத்தியதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நீட் விலக்குக்காக இருமுறை சட்டம் இயற்றினோம், ஆனால் அவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன.

இந்த ஆண்டு நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ளதால், 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வை இரத்து செய்து, பள்ளிப் பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசுகளே மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரியுள்ளார். இதற்காக, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019-இன் 14-ஆம் பிரிவினைத் திருத்தி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 123-இன்படி, ஓர் அவசரச் சட்டத்தை இயற்றிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்ய இந்த கோரிக்கையை ஏற்க வேண்டும் எனப் பிரதமர் மோடியிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:NEET ExamTamil Naduநீட் தேர்வுமருத்துவ சேர்க்கைமு.க. ஸ்டாலின்ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
Next Article மழை அச்சத்தில் விவசாயிகள்: நெல் கொள்முதல் நிறுத்தம் கூடாது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவர்களை தேடும் பணி

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும்…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அமோனியா கசிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆனது

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. முதலமைச்சர் விஜயிடம் விசாரணை அறிக்கை…

1 Min Read
தமிழ்நாடு

வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் யானைகள் நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் தண்ணீர் தேடி குட்டிகளுடன் யானைகள் நடமாடுவதால், சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

0 Min Read
தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆஜர்

சாலைகள் சீரமைப்பு பணிகளில் 3.23 கோடி ரூபாய் முறைகேடு புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணைக்காக நேரில் ஆஜராக உத்தரவு.

1 Min Read
தமிழ்நாடு

புதிய பாடத்திட்டம்: 9 புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர் ராஜ் மோகன்!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 9 பாடப் புத்தகங்களை வெளியிட்டார். பள்ளிகள் ஜூன்…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?