MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து: நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ தீவிர விசாரணை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து: நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ தீவிர விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து: நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ தீவிர விசாரணை

இந்தியா

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து: நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ தீவிர விசாரணை

Admin
Last updated: மே 13, 2026 6:52 காலை
Admin
Share
SHARE

வினாத்தாள் கசிந்தது கண்டறியப்பட்டதால், மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இந்த சூழலில் நீட் தேர்வுக்கு முன்பாக ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் ராஜஸ்தான் போலீசார் இணைந்து நடத்திய விசாரணையில் பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுதொடர்பாக என்.டி.ஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய அளவிலான தேர்வுகளை நேர்மையாகவும், நம்பகத்தன்மையுடனும் நடத்த என்.டி.ஏ உறுதி பூண்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்களை விசாரிக்க மத்திய புலனாய்வு அமைப்புகளை கேட்டுக்கொண்டோம். அந்த அமைப்புகள் விசாரணை நடத்தி என்.டி.ஏ-விடம் விரிவான அறிக்கையை சமர்ப்பித்தன. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

நீட் மறுதேர்வுக்கு புதிதாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்வுக் கட்டணமும் செலுத்த வேண்டாம். ஏற்கனவே செலுத்திய தேர்வுக் கட்டணம் திரும்ப வழங்கப்படும். என்.டி.ஏ-வின் சொந்த நிதியில் மறுதேர்வு நடத்தப்படும். மாணவ, மாணவிகள் ஏற்கனவே எழுதிய தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்தப்படும். மறுதேர்வுக்கான தேதி, ஹால் டிக்கெட் குறித்து என்.டி.ஏ சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு neet-ug@nta.ac.in இ-மெயில் முகவரி மற்றும் 011-40759000 / 011-69227700 தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு என்.டி.ஏ தெரிவித்துள்ளது.

தேசிய தேர்வு முகமை தலைவர் சுபோத் குமார் சிங் கூறும்போது, 'மாணவ, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் அகற்றப்படுவார்கள். வலுவான பாதுகாப்பு நடைமுறைகளோடு நீட் மறுதேர்வு நடத்தப்படும். இதுதொடர்பாக விரைவில் விரிவான வழிகாட்டு நெறிகள் வெளியிடப்படும். இதன்மூலம் எதிர்காலத்தில் தவறுகள் நடைபெறுவது தடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

நீட் மறுதேர்வு குறித்து என்.டி.ஏ வட்டாரங்கள் கூறும்போது, 'வினாத்தாள் கசிவு காரணமாகவே நீட் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. பாடத்திட்டம், வினாத்தாள், தேர்வு நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது. மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்தில் மறுதேர்வு நடத்தப்படக்கூடும்' என்று தெரிவித்தன.

ரூ.100 கோடி வரை… நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ நேற்று வழக்குப்பதிவு செய்து முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: நீட் தேர்வுக்கான வினாத்தாளை அச்சிட்ட அச்சகம் அல்லது வாகனங்களில் வினாத்தாள் கொண்டு செல்லப்பட்ட போது வினாத்தாள் கசிந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம். முதல் வினாத்தாளை வழங்கிய அச்சக ஊழியருக்கு ரூ.10 கோடி வரை வழங்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. வினாத்தாள் சில இடங்களில் ரூ.28 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.

இந்த வழக்கில் இதுவரை கைதானவர்களில் பெரும்பாலானோர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். கேரளாவில் மருத்துவக் கல்லூரி மாணவர் பிடிபட்டுள்ளார். இதே வழக்கில் மகாராஷ்டிராவின் நாசிக்கில் சுபம் காரினார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போபாலில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களின் போலீஸாரிடம் இருந்து ஆதாரங்களைப் பெற்று முழுமையான விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைக் கண்டித்து பல்வேறு மாணவர் சங்கங்கள் சார்பில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லி மட்டுமல்லாது பாட்னா, கோட்டா, சிகார், டேராடூன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நேற்று போராட்டங்கள் நடத்தப்பட்டன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நல்ல முதல்வர் கிடைத்துவிட்டார் – ஆர்.ஜே. பாலாஜி
Next Article ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலிடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

இந்தியா

உ.பி.யில் புயல், மழை: 89 பேர் பலி; நிவாரணப் பணிகளுக்கு முதல்வர் உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் திடீரென வீசிய சூறைக்காற்று மற்றும் கனமழையால் 89 பேர் உயிரிழந்தனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணப் பணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

1 Min Read
அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் அறிவிப்பு
இந்தியா

பள்ளிகளுக்கு அருகே ‘ஸ்டிங்’ பானங்களுக்கு தடை: அமைச்சர் அறிவிப்பு

பள்ளிகளுக்கு அருகில் 'ஸ்டிங்' எனர்ஜி பானம் விற்க தடை விதித்து அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தல்.

1 Min Read
இந்தியா

பெங்களூரு மத்திய சிறையில் 4000 கைதிகளுக்கு யோகா பயிற்சி

பெங்களூரு மத்திய சிறையில் 12-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 4,000 கைதிகள் யோகா பயிற்சி செய்தனர். இது அவர்களின் மன நலனை மேம்படுத்தும்.

1 Min Read
இந்தியா

மணிப்பூர்: 4 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்

மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பால், தவ்பெல் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள் பறிமுதல்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?