MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: உ.பி.யில் புயல், மழை: 89 பேர் பலி; நிவாரணப் பணிகளுக்கு முதல்வர் உத்தரவு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > உ.பி.யில் புயல், மழை: 89 பேர் பலி; நிவாரணப் பணிகளுக்கு முதல்வர் உத்தரவு!
இந்தியா

உ.பி.யில் புயல், மழை: 89 பேர் பலி; நிவாரணப் பணிகளுக்கு முதல்வர் உத்தரவு!

Admin
Last updated: May 14, 2026 6:42 pm
Admin
Share
SHARE

உத்தரப் பிரதேசத்தில் திடீரென வீசிய சூறைக்காற்று மற்றும் கனமழையால் 89 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 53 பேர் காயமடைந்துள்ள நிலையில், 114 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. பரேலி, பிரயாக்ராஜ், பதோஹி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த இயற்கைச் சீற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புயல் மற்றும் கனமழையின் போது, மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்ததில் ஏராளமான வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. புழுதிப் புயல் காரணமாக பார்வைத் திறன் குறைந்து, விளம்பரப் பலகைகளும், தகரக் கூரைகளும் பறந்தன. வாகனங்களும், வீடுகளும் சேதமடைந்ததோடு, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். பாதிப்புகளை உணர்வுப்பூர்வமாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரடியாகச் சந்தித்து, 24 மணி நேரத்துக்குள் நிதி உதவி அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மண்டல ஆணையர்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், சூறைக்காற்று, கனமழை, மின்னல் பாதிப்புகள் குறித்த தகவல்களை ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் ஒருமுறை அனுப்புமாறு அனைத்து மாவட்டங்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகள் குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மக்களுக்குத் தெரியப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். மாவட்ட அதிகாரிகளுடன் நேரடி ஒருங்கிணைப்பு மூலம் நிலைமை கண்காணிக்கப்பட்டு, தேவையான நிதி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Heavy RainsUP StormUttar Pradesh Rainஇயற்கை பேரிடர்உத்தரப் பிரதேசம்கனமழை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டெல்லி அரசு ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம்: மத்திய அரசு அறிவிப்பு!
Next Article மேற்கு வங்கத்தில் பசுவதை தடுப்பு சட்டம் அமல்: பாஜக அரசு அதிரடி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருமணம் நின்றுபோனது! மணமகன் மீது மணமகள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

உத்தர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் காதல் திருமண விழாவில் பெரும் குழப்பம்! மணமகனை பார்த்ததும்…

May 14, 2026

தேர்தல் ஆணையர் தேர்வு: அமைச்சர் முடிவெடுப்பாரா? உச்சநீதிமன்றம் கேள்வி

தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு குழுவில் மத்திய…

May 14, 2026

16 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மே 30 முதல் சிறப்பு பணிகள் தொடக்கம்!

நாடு முழுவதும் 16 மாநிலங்கள் மற்றும் 3…

May 14, 2026

மேற்கு வங்கத்தில் பசுவதை தடுப்பு சட்டம் அமல்: பாஜக அரசு அதிரடி!

மேற்கு வங்கத்தில் பாஜக தலைமையிலான புதிய அரசு,…

May 14, 2026

உ.பி.யில் புயல், மழை: 89 பேர் பலி; நிவாரணப் பணிகளுக்கு முதல்வர் உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் திடீரென வீசிய சூறைக்காற்று மற்றும்…

May 14, 2026

You Might Also Like

இந்தியா

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக அசாமின் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.…

1 Min Read
இந்தியா

ஆசைக்கு இணங்க மறுத்த பெண் படுகொலை: தொழில் அதிபர் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் ஒசக்கோட்டை தாலுகா சூலிபெலே பகுதியை சேர்ந்தவர் தீபக் கிருஷ்ணா. தொழில் அதிபரான இவர் சூலிபெலே பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் குறைவான இடத்தில்…

2 Min Read
இந்தியா

பெங்களூருவில் சாதி பாகுபாடு காரணமாக‌ பட்டியலின போலீஸாருக்கு வாடகை வீடு தர மறுப்பு

பெங்களூரு: கர்​நாடக காவல் துறை​யில் பணி​யாற்​றும் பட்​டியலின மற்​றும் பழங்​குடி​யின போலீ​ஸாருக்​கும் வீடு வாடகைக்கு தர மறுக்​கப்​படு​வ​தாக சம்​பந்​தப்​பட்ட வகுப்பை சேர்ந்த போலீ​ஸார், கர்​நாடக போலீஸ் ட

1 Min Read
இந்தியா

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.  கொல்​கத்​தா​வின் பிரி​கேட் பரேடு மைதானத்​தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்குப்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?