MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காங்கிரஸின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்: நயினார் நாகேந்திரன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காங்கிரஸின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்: நயினார் நாகேந்திரன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - காங்கிரஸின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்: நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு

காங்கிரஸின் துரோகங்கள் உலகிற்கே தெரியும்: நயினார் நாகேந்திரன்

Admin
Last updated: ஜூலை 8, 2026 3:42 மணி
Admin
Share
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
SHARE

காங்கிரஸ் கட்சியின் துரோகங்கள் உலகிற்கே தெரியும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி கொடுத்துள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்குகள் உட்பட பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி, கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சியைப் பிடிக்க முடியாமல் தவிக்கும் காங்கிரஸ் கட்சியினர், பிறரை குறை கூறுவதற்கு தகுதியில்லை என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

திரு. மாணிக்கம் தாகூர் அவர்களே, பாஜக தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தின் எந்த உரிமைகளையும் பறிக்கவில்லை. எங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, தலையைச் சுற்றி மூக்கைத் தொட முயற்சி செய்கிறீர்கள். நேஷனல் ஹெரால்டு வழக்குகள் உட்பட பல ஊழல் வழக்குகளில் சிக்கி, கடந்த 12 ஆண்டுகளாக தோல்வியையே சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியினர், யாரையும் குறை கூற தகுதியில்லை என்பதே எங்கள் வாதம். இதில் என்ன அவதூறு கண்டீர்கள்?

மேலும், பழைய கூட்டணி பழக்கத்தின் காரணமாக, திமுகவின் ₹1 வரிக்கு 29 பைசா என்ற புளித்துப் போன பொய் பிரச்சாரத்தையே நீட்டி முழக்கிக் கொண்டிருக்கிறீர்கள். காங்கிரஸ் கட்சி இன்னும் 'கோமா' நிலையில் இருந்து மீளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. வேலை நாட்களை 125 ஆகவும், ஊதியத்தை 300-க்கு அதிகமாகவும் உயர்த்திய 'VB G RAM G' திட்டத்தை உங்கள் புதிய கூட்டணிக் கட்சியான திமுக தலைமையிலான அரசு செயல்படுத்தி வருவது உங்களுக்குத் தெரியுமா? கள நிலவரம் தெரியாமல் அந்தத் திட்டத்தை நீங்கள் எதிர்ப்பது ஏன்?

கச்சத்தீவை தாரை வார்த்து தமிழக மீனவர்களை வஞ்சித்தது அன்றைய காங்கிரஸ் அரசாங்கத்தின் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்கள். எமர்ஜென்சி என்ற பெயரில் மாநிலங்களின் ஜனநாயகக் குரல்வளையை நெரித்ததும், Article 356-ஐ பயன்படுத்தி 90 முறை மாநில அரசுகளை கவிழ்த்ததும் உங்கள் காங்கிரஸ் கட்சிதான். காவிரி பங்கீட்டில் தமிழக மக்களுக்கு துரோகம் செய்தது உங்கள் காங்கிரஸ். முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழகத்தின் உரிமைகளை பிற மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்து துரோகம் செய்தது உங்கள் காங்கிரஸ்.

தற்போது மேகதாது அணை கட்டுவதாகக் கூறி தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்யத் துடித்துக் கொண்டிருப்பதும் உங்கள் காங்கிரஸ் கட்சியே. இப்படி ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு, கூட்டாட்சி தத்துவத்தை பலமுறை தீயிட்டு கொளுத்திய காங்கிரஸ் கட்சி, தற்போது மட்டும் மாநில உரிமைகளைப் பற்றி பேசுவது நியாயமா திரு. மாணிக்கம் தாகூர் அவர்களே?

எப்பொழுதெல்லாம் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் காவிரி, மேகதாது பிரச்சினைகளும் வருகின்றன. பல வருடங்கள் கழித்து தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள உங்கள் காங்கிரஸ் கட்சி, மக்களுக்கு நல்லது செய்வதை பற்றி யோசிக்காமல், தமிழக மக்களுக்கு மீண்டும் எப்படி துரோகம் செய்யலாம் என உள்ளே சிந்தித்துக் கொண்டு, வெளியே தமிழகத்தின் உரிமைகள் பற்றி பேசுவது “சாத்தான் வேதம் ஓதுவது” போலானது என்று நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BetrayalBJPCongressManickam TagoreNainar NagesendranTamil Nadu Rightsகாங்கிரஸ்தமிழக உரிமைகள்துரோகம்நயினார் நாகேந்திரன்பாஜகமாணிக்கம் தாகூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி நேர்மையான அதிகாரிகளை நீக்கும் தவெக அரசு: ஜோதி நிர்மலாசாமியின் பதவி விலகல்?
Next Article தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சுங்கச்சாவடிகளில் நேர்மையான சேவை: வேல்முருகன் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி உண்டியலில் ரூ.4.72 கோடி குவிந்தது: பக்தர்கள் நீண்ட வரிசை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4.72 கோடி வசூலானது. கோடை…

ஜூலை 8, 2026

மத்தியபிரதேசத்தில் கிணற்றில் 13 மான்கள் உயிரிழப்பு: விசாரணை தீவிரம்

மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு கிணற்றுக்குள் 13 மான்கள்…

ஜூலை 8, 2026

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ்…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

குற்றாலத்தில் தாயை பிரிந்த குட்டி யானை மீட்பு: வனத்துறையினர் தீவிர முயற்சி!

தென்காசி குற்றாலம் அருகே தாயை பிரிந்து தவித்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டுள்ளனர். தாய் யானையுடன் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1 Min Read
தமிழ்நாடு

சிவகாசி அருகே கோர விபத்து: 10 நாள் ஓட்டுநரால் 35 பேர் காயம்!

சிவகங்கை அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் காயமடைந்தனர். பேருந்தை இயக்கிய ஓட்டுநர் 10 நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தது முதற்கட்ட…

1 Min Read
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,08,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் குழந்தை பாலியல் வன்கொடுமை: பா.ரஞ்சித் கண்டனம்

கும்மிடிப்பூண்டியில் பெண் குழந்தைக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?