MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வேறு திருமணம் செய்யப் போவதாக கூறிய மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: நாகர்கோவிலில் அதிர்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - க்ரைம் - வேறு திருமணம் செய்யப் போவதாக கூறிய மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: நாகர்கோவிலில் அதிர்ச்சி

க்ரைம்

வேறு திருமணம் செய்யப் போவதாக கூறிய மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்: நாகர்கோவிலில் அதிர்ச்சி

Admin
Last updated: மே 25, 2026 8:31 மணி
Admin
Share
SHARE

வேறு திருமணம் செய்யப் போவதாக மனைவியின் கூறியதால், கணவன் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகர்கோவிலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் வடசேரி காட்டு நாயக்கன் பகுதியைச் சேர்ந்த செந்தில் (36), நாகர்கோவில் மாநகராட்சியில் ஒப்பந்த ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சுமிதா (34) என்பவருக்கும் திருமணமாகி, சஜின் (14) என்ற மகனும் உள்ளனர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது திருப்பதிசாரம் பூங்கா நகர் பகுதியில் வசித்து வந்தனர்.

செந்திலுக்கும், சுமிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால், சுமிதா அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம். செந்தில் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, 'உன்னுடன் வாழ பிடிக்கவில்லை, நான் மறு திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்று கூறி சுமிதா தகராறு செய்துவிட்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை சமாதானம் செய்து செந்தில் நேற்று வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்ததும், மகனை வெளியே விளையாட அனுப்பிவிட்டு, செந்தில் தனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். பின்னர், அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த மகன், தனது தந்தை மற்றும் தாயார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை மற்றும் தற்கொலை சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Crimeகணவன்கொலைதற்கொலைநாகர்கோவில்மனைவி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தூத்துக்குடி மாணவி கொலை: இரட்டை தூக்கு தண்டனைக்கு முதல்வர் விஜய் வரவேற்பு
Next Article ஆனந்தம் பட வெளியீட்டுக்கு 25 ஆண்டுகள் நிறைவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி திருமலையில் 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 116 வயது மூதாட்டி

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இரு மகன்கள் இருந்தும் தனிமையில் தம்பதி: விரக்தியில் சோக முடிவு

இரு மகன்கள் இருந்தும் தனிமையில் வாழ்ந்த தம்பதி, வாழ்க்கையில் விரக்தியடைந்து சோகமான முடிவை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

ஐஸ் வியாபாரி கொலை: மைத்துனர்கள் கைது – விபத்து நாடகமும் அம்பலம்!

பல்லடத்தில், குடும்ப தகராறில் மாமியாரை தாக்கிய ஐஸ் வியாபாரியை, மைத்துனர்கள் அடித்து கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடிய சம்பவம் அம்பலமாகியுள்ளது. இருவர் கைது.

2 Min Read
க்ரைம்

போலீஸ் என மிரட்டி நகை, பணம் பறித்த இருவர் கைது

சென்னை கோடம்பாக்கத்தில் தனியாக வசித்த பெண்ணிடம், போலீஸ் என மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

1 Min Read
இந்தியா

மகனைக் கண்டுகொலை: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியைக் கைது செய்தது போலீஸ்

சென்னையில், மகன் கண் முன்னே கணவரை மனைவியே குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளத்தொடர்பு காரணமாக இந்த கொலை நடந்ததா என போலீஸ்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?