MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: “ஜீரணிக்கவே முடியலை.. நாங்க வெற்றியை மட்டுமே பார்த்த அணி”.. தோல்விக்கு பின் கலங்கிய சூர்யகுமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - விளையாட்டு - “ஜீரணிக்கவே முடியலை.. நாங்க வெற்றியை மட்டுமே பார்த்த அணி”.. தோல்விக்கு பின் கலங்கிய சூர்யகுமார்

விளையாட்டு

“ஜீரணிக்கவே முடியலை.. நாங்க வெற்றியை மட்டுமே பார்த்த அணி”.. தோல்விக்கு பின் கலங்கிய சூர்யகுமார்

Admin
Last updated: மே 11, 2026 9:50 காலை
Admin
Share
SHARE

ராய்ப்பூரில் நடைபெற்ற லீக் போட்டியில் 5 முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆப் கனவு சுக்குநூறாக உடைந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் அடைந்த படுதோல்வியால், 2026 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்தத் தோல்விக்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மைதானத்தில் ஏக்கத்துடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த காட்சி ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.

ராய்ப்பூரில் உள்ள ஷாஹித் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 167 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடியது. ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா வீசிய 19வது ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்கப்பட்டது.

இதனால் கடைசி ஓவரில் பெங்களூரு வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. இளம் வீரர் ராஜ் பாவா வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் ரொமாரியோ ஷெப்பர்ட் விக்கெட்டை வீழ்த்தி மும்பை அணிக்கு வெற்றியை உறுதி செய்வது போல தெரிந்தது. ஆனால், 4வது பந்தில் புவனேஸ்வர் குமார் அடித்த அந்த ஒரு சிக்சர் மும்பையின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது. இறுதியில் கடைசி பந்தில் பெங்களூரு த்ரில்லர் வெற்றி பெற்றது.

காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா ஆடாததால், தற்காலிக கேப்டனாக அணியை வழிநடத்திய சூர்யகுமார் யாதவ் இந்த தோல்வியால் நிலைகுலைந்து போனார். போட்டிக்கு பின் பேசிய அவர், “இப்படி ஒரு நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இருப்பதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. இது ஒரு கசப்பான உண்மை. நாங்கள் எப்போதும் வெற்றியையே பார்த்த அணி, இப்போது பிளே ஆப் வாய்ப்பை இழந்தது தாங்க முடியாத வழியாக உள்ளது. அடுத்த ஆண்டு இன்னும் பலமாக மீண்டு வருவோம்” என கலங்கியபடி தெரிவித்தார்.

இந்த சீசனில் மும்பை அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8 தோல்விகளைச் சந்தித்துள்ளது. தொடக்கத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றியுடன் சீசனைத் தொடங்கினாலும், அதன் பிறகு அடுத்தடுத்து 4 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் அதலபாதாளத்திற்குச் சென்றது. திலக் வர்மாவின் அதிரடி சதம் குஜராத் அணிக்கு எதிராக ஒரு வெற்றியைத் தேடித்தந்தாலும், மற்ற வீரர்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணியால் மீண்டெழ முடியவில்லை.

கடந்த 2020ம் ஆண்டு ஐந்தாவது முறையாக கோப்பையை வென்ற பிறகு, மும்பை அணியின் கிரிக்கெட் பயணம் சரிவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த அந்த அணி, இப்போது 2026லும் பிளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது. நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா விக்கெட் எடுக்கத் திணறியதும், முக்கிய பேட்ஸ்மேன்கள் ஃபார்ம் அவுட் ஆனதும் இந்த மாபெரும் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது. சாம்பியன் அணியின் இந்த பரிதாப நிலை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாக நாளை ஹிமந்த பிஸ்வா சர்மா பதவியேற்பு
Next Article நெல்லை, தென்காசியில் தொடர் மழை.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு.!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவர்களை தேடும் பணி

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும்…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550…

ஜூலை 5, 2026

You Might Also Like

விளையாட்டு

கோலி, வெங்கடேஷ் ஐயர் அதிரடி: பெங்களூரு அணிக்கு 223 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது. கோலி, வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்து அசத்தினர்.

1 Min Read
விளையாட்டு

IPL 2026: “வெற்றி பெற தகுதியே இல்லை”.. மும்பை இந்தியன்ஸ்-ஐ வீழ்த்திய பின் ஆர்சிபி கேப்டன் பேச்சு

ராய்ப்பூர்: 2026 ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்…

2 Min Read
விளையாட்டு

6 மாத பயிற்சியில் 10 வயதில் சதம் அடித்த ஆஷிர்வாத் சூர்யவன்ஷி!

பீகாரைச் சேர்ந்த 10 வயது ஆஷிர்வாத் சூர்யவன்ஷி, வெறும் 6 மாத கிரிக்கெட் பயிற்சியில் 87 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். அவரது அண்ணன் வைபவ்…

3 Min Read
விளையாட்டு

ஸ்ரேயாஸ் ஐயர்: 3000 ரன்கள் மைல்கல்லை எட்ட காத்திருக்கும் இந்திய வீரர்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 23 ரன்கள் எடுத்தால், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 3,000 ரன்களைக் கடந்த இந்திய பேட்டர் என்ற…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?