MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நெல்லை, தென்காசியில் தொடர் மழை.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு.!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > நெல்லை, தென்காசியில் தொடர் மழை.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு.!
தமிழ்நாடு

நெல்லை, தென்காசியில் தொடர் மழை.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு.!

Admin
Last updated: May 11, 2026 9:50 am
Admin
Share
SHARE

இலங்கை அருகே உள்ள கடல் பகுதியில் நில விய வளிமண்டல கீழடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடைமழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டித்தீர்த்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.

நெல்லையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. வெயிலின் தாக்கம் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டத்திலும், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட இடங்களில் காலை வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. இதமான காற்று வீசியது.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 44.85 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 358 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.52 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 323 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 57.87 அடியாக உயர்ந்தது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளான கடனா அணை 32.30 அடியாவும். கருப்பாநதி 34.45 அடியாகவும், குண்டாறு 19 அடியாகவும் உயர்ந்தது. மற்ற அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 173 மில்லி மீட்டர் மழை பதிவானது. நாலுமுக்கு பகுதியில் 164 மி.மீ., காக்காச்சி பகுதியில் 148 மி.மீ., மாஞ்சோலையில் 132 மி.மீ. மழை பதிவானது. அதேபோல் பாபநா சத்தில் 39 மி.மீ., சேரன்மாதேவியில் 20.20 மி.மீ., மணிமுத்தாறில் 14.20 மி.மீ., அம்பையில் 3.60 மி.மீ. மழை பதிவானது.

தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் 17 மி.மீ., சிவகிரி யில் 13 மி.மீ., கருப்பாநதி அணை பகுதியில் 9.50 மி.மீ. மழையும் பதி வானது. அதேபோல் தென்காசி, கடனாநதி, செங்கோட்டை ஆகிய இடங் களில் தலா 3 மில்லி மீட்டர் மழையும், ராமநதி அணை, சங்கரன்கோ வில் ஆகிய இடங்களில் தலா 2 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “ஜீரணிக்கவே முடியலை.. நாங்க வெற்றியை மட்டுமே பார்த்த அணி”.. தோல்விக்கு பின் கலங்கிய சூர்யகுமார்
Next Article மக்களிடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பித்த பிறகு புதிய பயணத்தை தொடங்குவார் விஜய் – கிரிஷ் சோடங்கர்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் பினராயி விஜயனை சந்தித்த புதிய முதலமைச்சர் சதீசன்!

கேரளாவின் புதிய முதலமைச்சர் வி.டி.சதீசன், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து…

May 15, 2026

பிரதமர் மோடி யுஏஇ பயணம்: இந்தியா-யுஏஇ இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர யுஏஇ…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் மீது மத்திய அரசின் தாக்குதல் – ராகுல் காந்தி

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் லிட்டருக்கு…

May 15, 2026

ஆந்திராவில் வெள்ளிதோறும் ‘வாகனமில்லா தினம்’: சைக்கிளில் முதல்வர்!

ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும்.…

May 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மெஜாரிட்டியை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவி ஏற்கிறார்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத்…

1 Min Read
தமிழ்நாடு

வேலுமணி தரப்பு வாக்குகள் செல்லுமா? சபாநாயகர் முடிவு செய்வார் – திருமாவளவன் பேட்டி

வேளச்சேரியில் உள்ள திருமாவளவன் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், பெரும்பான்மை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து பெற்றார்; அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் மற்றும் எஸ்.பி. வேலுமணி…

1 Min Read
தமிழ்நாடு

அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டசபையில் வாக்கெடுப்பு

தமிழக சட்டசபையில் இன்று அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

2 Min Read
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து தவெகவினர் கொண்டாட்டம்

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை வென்றது. பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவை என்பதால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அத்போல, விசிக,…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?