MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பொறுப்பு கவர்னருக்கு பொறுப்பு வேண்டாமா? – அமைச்சர் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > பொறுப்பு கவர்னருக்கு பொறுப்பு வேண்டாமா? – அமைச்சர் கேள்வி
தமிழ்நாடு

பொறுப்பு கவர்னருக்கு பொறுப்பு வேண்டாமா? – அமைச்சர் கேள்வி

Admin
Last updated: July 3, 2026 11:10 am
Admin
Share
SHARE

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு பொறுப்பு கவர்னர் ஆர்.என்.ரவி, 'மதுரை வைகை ஆற்றைப் பார்த்தேன். ஆறு உள்ளது, ஆனால் நீர் இல்லை. துப்பாக்கி எடுத்து போருக்குச் செல்வது மட்டுமல்ல, நதிகளை மீட்பதும் தேசப்பற்றுதான். வைகையை மீட்க இளைஞர்கள் முன்வர வேண்டும். வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், கவர்னர் மாளிகையே களமிறங்கும்' என்று பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டமும் நடத்தினார்.

கேரளாவின் கவர்னராகவும் உள்ள ஆர்.என்.ரவி, கடந்த மார்ச் 12-ம் தேதி தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக பதவியேற்றார். பொறுப்பு கவர்னருக்கு பொறுப்பு இருக்க வேண்டாமா என்று தமிழ்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பும் வகையில் அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பு, தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் சனாதன கருத்தியலை கொண்ட புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றால் மட்டுமே, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக, கூட்டாட்சி தத்துவத்தை ஒழிக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு கொண்ட பொறுப்பு கவர்னர் இது குறித்து வாய் திறப்பாரா? தமிழ்நாட்டின் நீர் ஆதாரமான காவிரி ஆற்றை தடுத்து நிறுத்தி, எமது உரிமையை பறிக்கும் வகையில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு மறைமுகமாக தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் இசைவு இல்லாமல், கடும் எதிர்ப்பை மீறி மேகதாது அணை திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் இத்திட்டத்தை எதிர்த்து பொறுப்பு கவர்னர் வாய் திறப்பாரா?

தமிழ்நாட்டின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து எதுவும் பேசாத கவர்னர் ஆர்.என்.ரவி, அவருக்கு முன்பு இருந்த கவர்னர் ஆர்.என்.ரவி போலவே தமிழர்களுக்கு தொடர்பில்லாத, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான கருத்துகளை கூறி வருகிறார். கடந்த ஜூலை 1-ம் தேதி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் நலன்கள் குறித்து உள்துறை அமைச்சரிடம் ஏதேனும் கோரிக்கை வைத்தாரா? அல்லது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக செயல்பட வேண்டும் என 'ஆலோசனை' பெற்று வந்தாரா என்று கேள்வி எழுகிறது. 2014-ல் மத்திய பாஜக ஆட்சி அமைந்ததும், தூய்மை கங்கை திட்டத்தை கொண்டு வந்தனர். நீர்வளத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 2014 முதல் 2026 வரை செலவிடப்பட்ட மொத்த தொகை 26,824.86 கோடி ரூபாயாகும். 26 ஆயிரம் கோடியை கொட்டிய பின்பும் கங்கை ஆற்றின் நிலை என்ன? மனித பிணங்களும், ஆலை கழிவுகளும் தானே அதன் அடையாளமாக இன்றும் உள்ளது. இது குறித்து வாய் திறப்பாரா பொறுப்பு கவர்னர்?

காவிரி உரிமையை பாதுகாப்பது, வைகையை மீட்பது, தாமிரபரணியை போற்றுவது ஆகிய கடமைகளை தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்ளும். எமது முதல்வர் ஜோசப் விஜய் அதற்கான திட்டங்களையும் உத்திகளையும் மேற்கொள்வார். கவர்னர் முதல்வருக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை சொல்லலாம். அதை விடுத்து, அதிகாரிகளை வரவழைத்து ஆய்வுக்கூட்டங்களை நடத்த முயற்சிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசை அவமதிப்பது மட்டுமல்ல; ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும். தமிழ் வளர்த்த மதுரையில் 'வசுதைவ குடும்பகம்' என்று தமிழர்களுக்கு தேச பக்தி குறித்து பாடம் எடுத்துள்ளார் பொறுப்பு கவர்னர் ஆர்.என்.ரவி. புறநானூறு சொல்லும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என எல்லோரையும் நேசிக்கும் தமிழர்களுக்கு தேச பக்தி குறித்து பாடம் எடுக்க தேவையில்லை. தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆளுமையுள்ள புதிய முதல்வர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்து வருகிறார். தமிழ்நாட்டின் இறையாண்மைக்குள் நிர்வாகத்துக்குள் கவர்னர் தலையிடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் வன்னி அரசுஆர்.என். ரவிதமிழ்நாடு அரசுபொறுப்பு கவர்னர்வைகை நதி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 2 நாட்களில் தங்கம் விலை ₹3,600 உயர்வு: ராக்கெட் வேகம்!
Next Article 40 ஆண்டுகால வரலாற்றை மாற்றியமைக்கும் மோடியின் நியூசிலாந்து பயணம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு உத்தரவு: 7 மொபைல் செயலிகளுக்கு தடை

7 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை: முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் செயல்பட்டு வந்த 7 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை…

July 3, 2026

தமிழகத்தில் நேர்மையான ஆட்சி: முதல்-அமைச்சர் விஜயை புகழும் வைகோ

முதல்-அமைச்சர் விஜய் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை வழங்கி…

July 3, 2026

மேகதாது விவகாரம்: டி.கே. சிவக்குமார் அமைதிக்கு அசோகா கேள்வி

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்…

July 3, 2026

சகோதரரை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி நீதிமன்றம், அமைச்சர் மரிய வில்சன் தனது…

July 3, 2026

வாட்ஸ்அப் புதிய யூசர்நேம் அம்சம்: பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

வாட்ஸ்அப் தனது புதிய 'யூசர்நேம்' அம்சம் குறித்து…

July 3, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஒகேனக்கல்: சாலையோரம் இளைப்பாறும் யானைகள் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் வறட்சி காரணமாக வெளியேறிய யானைகள் சாலையோரம் இளைப்பாறி, சாலையில் சென்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

1 Min Read
தமிழ்நாடு

மாநிலம் முழுவதும் காவல் ரோந்து: டிஜிபி உத்தரவு

தமிழகம் முழுவதும் காவல் நடைரோந்து பணிகளை தீவிரப்படுத்த மாநில காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

1 Min Read
தமிழ்நாடு

அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்ட நாள் – நயினார் நாகேந்திரன் பதிவு

அவசரநிலையை 'அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்ட நாள்' என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சூழல்கள் மீண்டும் ஏற்படாமல் தடுப்பது அனைவரின் கூட்டுப்…

1 Min Read
தமிழ்நாடு

திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விலகியுள்ளது. இந்த திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?