MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அமைச்சர் சரத்குமார் பதவி நீக்கம்: திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அமைச்சர் சரத்குமார் பதவி நீக்கம்: திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு

அமைச்சர் சரத்குமார் பதவி நீக்கம்: திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம்

Admin
Last updated: ஜூன் 28, 2026 3:04 மணி
Admin
Share
SHARE

பொது இடத்தில் அமைச்சர் டி.சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ வெளியான நிலையில், அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி நாளை (29-06-2026, திங்கட்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக மாணவரணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. டி.சரத்குமார் அவர்கள், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.டி.சரத்குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், 'பூமியில் இருக்குது மூனு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா' – 'பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க' போன்ற தத்துவப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இன்னுமும் ரசிக மனநிலையிலேயே இருக்கின்றனர். அதிலும் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களது கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற “டாட்டூ”-வைப் போட்டுக்கொண்டு, அவரது தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ, இதையெல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் தேங்கி நிற்கிறார் என்பதை வேதனையோடு பதிவு செய்து, அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளை முதலமைச்சர் கண்டித்து இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க. மாணவரணி வலியுறுத்துகிறது” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKMinisterஅமைச்சர்ஆர்ப்பாட்டம்டி.சரத்குமார்திமுகமாணவரணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வார விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
Next Article AI வீடியோக்கள் மூலம் கிண்டல்: பாகிஸ்தான் வீராங்கனைகள் மீது பாலின பாகுபாடு – சனா மிர் கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி திருமலையில் 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 116 வயது மூதாட்டி

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மாநகராட்சி தூய்மைப் பணி தனியார்மயமாக்கலுக்கு பிரேமலதா கடும் எதிர்ப்பு

மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

திருநெல்வேலி: வள்ளியூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கோட்டையில் நாளை மறுநாள் (மே 20, 2026) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி…

1 Min Read
தமிழ்நாடு

டாஸ்மாக் பார்கள் மூடல்: உரிமையாளர்கள், ஊழியர்கள் சென்னையில் போராட்டம்!

தமிழக அரசு 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில், பார் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர். வாழ்வாதாரத்தை காக்க கோரிக்கை.

2 Min Read
தமிழ்நாடு

ஆவடியில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞர்கள் கைது!

ஆவடியில் 100 கிலோ கஞ்சா மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் தொடர்பு உள்ளதா என விசாரணை…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?