MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: AI வீடியோக்கள் மூலம் கிண்டல்: பாகிஸ்தான் வீராங்கனைகள் மீது பாலின பாகுபாடு – சனா மிர் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: AI வீடியோக்கள் மூலம் கிண்டல்: பாகிஸ்தான் வீராங்கனைகள் மீது பாலின பாகுபாடு – சனா மிர் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - AI வீடியோக்கள் மூலம் கிண்டல்: பாகிஸ்தான் வீராங்கனைகள் மீது பாலின பாகுபாடு – சனா மிர் கண்டனம்

விளையாட்டு

AI வீடியோக்கள் மூலம் கிண்டல்: பாகிஸ்தான் வீராங்கனைகள் மீது பாலின பாகுபாடு – சனா மிர் கண்டனம்

Admin
Last updated: ஜூன் 28, 2026 3:33 மணி
Admin
Share
SHARE

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் முன்வைக்கப்படும் பாலின பாகுபாடு கருத்துகளுக்கு பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெற்று தனது உலகக்கோப்பை பயணத்தை நிறைவு செய்தது.

பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சனா மிர், ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் விமர்சிக்கப்படும் விதத்தில் இருக்கும் இரட்டை நிலையை கடுமையாக கேள்வி எழுப்பினார். ஆடவர் அணி சிறப்பாக செயல்படாத போது இதேபோன்ற கருத்துக்கள் ஏன் எழுப்பப்படுவதில்லை என்றும் அவர் வினவினார். 'ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் செயல்பாடுகளைப் பற்றி பேசும்போது இங்கு இருக்கும் இரட்டை நிலையை என்னால் பார்க்க முடிகிறது. இந்த விமர்சனங்களின் தொனியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆம், அணி எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை என்பது உண்மைதான், ஆனால் அது மகளிர் அணி என்பதால் ஏன் அதற்கு ஒரு பாலினத்தை ஏன் சேர்க்க வேண்டும்?' என்று சனா மிர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது உலகக் கோப்பை தொடரில் வர்ணனையாளராகப் பணியாற்றி வரும் சனா, அணியின் தோல்வி மீதான ஏமாற்றம் நியாயமானது என்றாலும், அதை வெளிப்படுத்தும் விதம் கவலை அளிப்பதாகக் கூறினார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், மகளிர் அணியின் செயல்பாடுகளைப் பற்றி விவாதிக்கும் போது அவர்களுக்கு தேவையான உரிய மரியாதையை நாம் இன்னும் வழங்குவதில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார். பாகிஸ்தானில் பெண்கள் தொழில்முறை கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து விளையாடுவதில் இருக்கும் சவால்களை சுட்டிக்காட்டிய அவர், மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தினார். 'பாகிஸ்தான் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை அனைவருக்கும் புரிய வைக்க பல வருடங்கள் ஆனது. ஆனால், இந்த மனநிலையை நாம் மாற்றாத வரை நம்மால் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது' என்றார்.

மேலும், சமூக வலைதளங்களில் பெண் கிரிக்கெட் வீரர்களை கேலி செய்வதற்கும், தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் பயன்படுத்தப்படுவதை சனா மிர் கடுமையாக விமர்சித்தார். இதனால் சம்பந்தப்பட்ட வீரர்களின் குடும்பத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார். அணியின் செயல்பாடு கிரிக்கெட் திறமையின் அடிப்படையில் மதிப்பிடப்படாமல், பாலினத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுவது தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாகக் கூறினார். இறுதியாக, மகளிர் கிரிக்கெட்டில் புதிய திறமைகளைக் கண்டறிவதற்கும், வீராங்கனைகளுக்குள் ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதற்கும் அதிக அளவிலான உள்நாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று சனா மிர் வலியுறுத்தினார். அணியில் தங்களது இடத்திற்குப் போட்டி இல்லை என்பதை வீராங்கனைகள் உணரும் போது, அது அவர்களின் ஆட்டத்திறனைப் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AI வீடியோக்கள்சனா மிர்பாகிஸ்தான் கிரிக்கெட்பாலின பாகுபாடுமகளிர் கிரிக்கெட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமைச்சர் சரத்குமார் பதவி நீக்கம்: திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம்
Next Article மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த நிர்வாகிகள்: வைகோ மீது குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசிய இடத்தை பாஜகவுடன் தொடர்புடையவர்கள்…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

கேரளம் எனப் பெயர் மாற்றம்: பின்னணி என்ன?

கேரள மாநிலத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' என…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

விளையாட்டு

சச்சின் அறிவுரை: ஜெமிமா ரோட்ரிக்ஸ் நெகிழ்ச்சி

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதம் அடித்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், சச்சின் டெண்டுல்கரின் அறிவுரை தனக்கு மிகுந்த உதவியாக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஷஃபாலி…

2 Min Read
விளையாட்டு

இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி: 20 ஓவர் ஆட்டத்திற்குக் கடைசி நேரம் என்ன?

தர்மசாலாவில் இந்தியா - ஆப்கானிஸ்தான் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் ஆட்டம் நடைபெற மாலை 6:32 மணிக்குள் போட்டி தொடங்க வேண்டும், ஆனால் வாய்ப்புகள்…

1 Min Read
விளையாட்டு

சென்னை அணியில் இளம் வீரர் மேக்னெய்ல் ஹேட்லி!

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் இளம் வீரர் ராமகிருஷ்ணா கோஷ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.…

1 Min Read
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத்
விளையாட்டு

சிஎஸ்கேவுக்கு புதிய டி20 பயிற்சியாளர் தேவை: பத்ரிநாத் கருத்து

சிஎஸ்கே அணிக்கு புதிய டி20 பயிற்சியாளர் தேவை என்றும், ஸ்டீபன் பிளெமிங்கின் காலம் முடிந்துவிட்டதாகவும் முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ற தொழில்நுட்பம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?