மதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், அக்கட்சியின் முன்னாள் மாநில நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்துள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மதிமுகவின் முன்னாள் மாநில நிர்வாகிகள் அழுகுசுந்தரம், புலவர் செவந்தியப்பன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.
திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரே கட்சியாகவும், முன்னோடி தலைவராகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்றும், திமுக இன்று தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் மக்களுக்காக எப்போதும் களத்தில் நிற்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய புலவர் செவந்தியப்பன், தனியாக கட்சி நடத்துவதை விட திமுகவுடன் மதிமுகவை இணைத்துவிடலாம் என்று கூறியதற்கு, தன்னை கட்சியில் இருந்து வைகோ நீக்கியதாக குற்றம் சாட்டினார். திமுக கூட்டணியில் இருந்துகொண்டே திமுகவை காப்பாற்ற வைகோ தயாராக இல்லை என்றும், ஈழ பிரச்சனைகளிலும் வைகோ உண்மையாக செயல்படவில்லை என்றும் அவர் கூறினார்.
வருங்காலத்தில் திமுகவை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே மதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த இணைப்பு, மதிமுகவின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.