MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக ஆட்சி ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை விரைவில்: அமைச்சர் ரமேஷ்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக ஆட்சி ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை விரைவில்: அமைச்சர் ரமேஷ்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுக ஆட்சி ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை விரைவில்: அமைச்சர் ரமேஷ்

தமிழ்நாடு

திமுக ஆட்சி ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை விரைவில்: அமைச்சர் ரமேஷ்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 4, 2026 7:18 காலை
Fernandez
Share
அமைச்சர் ரமேஷ் தீரன் சின்னமலை உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்
அமைச்சர் ரமேஷ் தீரன் சின்னமலை உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
SHARE

திருச்சியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ், "தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியா முழுவதும் உள்ள அனைத்துத் தலைவர்களும் பாராட்டும் வகையில் மிகச் சிறந்த ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களின் பேராதரவோடு வரலாற்றிலேயே சிறந்த அரசியல் மாற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையாக வாக்களிக்காதவர்கள் கூட சந்தோஷமாக வாழும் வகையிலான நல்லாட்சி நடந்து வருகிறது. அனைத்து விஷயங்களையும் பேசிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை; செயலில் காட்டினால் போதும். நமது முதல்வர் தனது செயல்பாடுகள் மூலமாகவே இந்த ஆட்சியைச் சிறந்த நல்லாட்சியாக மாற்றி வருகிறார்" என்று தெரிவித்தார்.

கோயில்களில் தரிசனத்திற்கு லஞ்சம் வாங்கும் செயல்கள் ஏற்கெனவே 80 சதவீதம் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், இன்னும் சில கோவில்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், யாராக இருந்தாலும் எந்தவித பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நாம் தமிழர் கட்சியினர் 15 ஆண்டுகளாகப் பயிற்சி, பயிற்சி எனப் பயிற்சி பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், ஒரு தலைவருக்கு எதிராக வெறுப்பு அரசியல் பேசுவதை விட்டுவிட்டு, உண்மையான வெற்றி பெறுவதற்கான நோக்கத்தோடு சீமான் பேசினால், நிச்சயமாக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு சில இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

காவிரி மற்றும் கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்ற விவசாய சங்கங்களின் கோரிக்கைகள் குறித்துத் துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அதுகுறித்த ஆய்வுகள் நடந்து வருவதாகவும், பட்ஜெட் நிலைக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அமைச்சர் ரமேஷ் கூறினார்.

மேலும், "தான் ஓடி ஒளியவில்லை என கூறும் செந்தில் பாலாஜி இவ்வளவு நாட்களாக எங்கு காணாமல் போயிருந்தா? தைரியமாக வந்து நின்று, நீதிமன்ற வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதுதானே?" என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், "இந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்" என்றார்.

கடந்த திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் கோவில் சொத்துக்கள் அபகரிப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பாகத் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். கோவில் சொத்துக்கள் எவ்வித சமரசமுமின்றி முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் உறுதியளித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CorruptionDMK RuleMinister RameshWhite Paperஅமைச்சர் ரமேஷ்ஊழல்கோவில் சொத்துக்கள்செந்தில் பாலாஜிதிமுக ஆட்சிதீரன் சின்னமலைவெள்ளை அறிக்கை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஒட்டகப்பால் அருந்தும் நபர் ஒட்டகப் பாலில் டீ: சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மையா?
Next Article நெல்லை விக்கிரமசிங்கபுரம் அருகே உயிரிழந்த பெண் கரடி நெல்லை: தோட்டப் பகுதியில் பெண் கரடி உயிரிழப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே

சிஜேபி கட்சியாக மாறாது: நிறுவனர் அபிஜித் திப்கே பேட்டி

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அரசியல் கட்சியாக மாறாது என அதன்…

ஆகஸ்ட் 4, 2026

கேரளாவில் கனமழை: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.8 லட்சம் நிவாரணம்

கேரளாவில் கனமழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.8…

ஆகஸ்ட் 4, 2026

சமையல் கியாஸ் மானியம்: பெண் தொழிலாளியின் கணக்கில் ₹100 கோடி!

சமையல் எரிவாயு மானியமாக ஒரு பெண் தொழிலாளியின்…

ஆகஸ்ட் 4, 2026

பிஹார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

பிஹார் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சித் தலைவர்…

ஆகஸ்ட் 4, 2026

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை உயர்வு: மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38…

ஆகஸ்ட் 4, 2026

You Might Also Like

ஆசனூர் வனப்பகுதியில் சாலையில் உலா வரும் காட்டு யானை
தமிழ்நாடு

ஆசனூர் அருகே சாலையில் உலா வந்த காட்டு யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

ஆசனூர் அருகே சாலையில் உலா வந்த காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

2 Min Read
தமிழ்நாடு

சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் விஜய் மரியாதை

தமிழகத்தின் 13வது முதல்-அமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை பதவியேற்றார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை…

0 Min Read
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு

நாட்டையும் இளைஞர்களின் எதிர்காலத்தையும் மோடி அரசு கேள்விக்குறியாக்கியுள்ளது: மாணிக்கம் தாகூர்

வினாத்தாள் கசிவு முதல் தேசிய பாதுகாப்பு கசிவு வரை, மோடி அரசு நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

1 Min Read
தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையம்
தமிழ்நாடு

தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று மின்தடை செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் தொழிற்சாலைகள் பாதிக்கப்படலாம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?