தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று மாலை ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அப்போது, முதல்வர் விஜய்யின் பாணியில் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி அவர் விளக்கமளித்தார்.
அவர் பேசுகையில், 'மாநிலத்தின் கணக்கு புத்தகத்தை உங்கள் முன் திறந்து வைக்கிறேன். இது முழுமையான வெளிப்படை தன்மையுடன் ஆதாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு பகுப்பாய்வு கட்டமைப்பாகும். இதில் இடம்பெறும் ஒவ்வொரு எண்ணிக்கையும் சரிபார்க்கப்பட்ட ஆவணங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் பட்ஜெட் ஆவணங்கள், இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் தரவுகள் மூலம் இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள எந்த தகவலையும் எந்த அரசியல் கட்சியும் மறுக்க முடியாது. கொரோனா காலத்திற்கு பிறகு இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஒரு தொடக்க நிலையில் இருந்து பயணத்தை தொடங்கின' என தெரிவித்தார்.
மேலும், திருக்குறளை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர் மரிய வில்சன், ஒரு குட்டி ஸ்டோரியையும் கூறினார். 'ஒரு புயலால் 4 அண்டை வீட்டாரின் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிட்டன என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது யாருடைய வீடு பெரிது என்பதைப் பார்த்து மதிப்பிடுவது நியாயமான ஒப்பீடு ஆகாது. வெள்ளம் வடிந்த பிறகு யார் தங்களது வீட்டை விரைவாக சீரமைத்து மீட்டெடுத்தார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அந்த நான்கு பேரில் மூவர் அதனைச் செய்தார்கள். நாம் செய்யவில்லை' என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த வெள்ளை அறிக்கை, மாநில அரசின் நிதிநிலை குறித்த விரிவான பகுப்பாய்வை வெளிப்படை தன்மையுடன் அளிப்பதாக அமைந்துள்ளது. அமைச்சர் மரிய வில்சனின் குட்டி ஸ்டோரி, மாநிலத்தின் நிதிநிலை மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் அமைந்தது.