தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், 'தமிழகம் எதிர்காலத்திற்காக காத்திருக்கவில்லை, அதை நாங்கள் கட்டமைக்கிறோம். கோப்புகள் மற்றும் ஒப்புதல்களுக்காக நீண்ட காலம் காத்திருக்க வைக்கும் அரசை யாரும் விரும்புவதில்லை. அதனை சரிசெய்யவே முதல்வர் விஜய் என்னை நியமித்துள்ளார். நமது அரசு 21 நாட்களில் விரைவான அனுமதி மற்றும் ஒற்றைச் சாளர ஒப்புதல்களுக்கு உறுதியளிக்கிறது. பிரச்சனைகளை என்னிடமும், முதல் அமைச்சரிடமும் நேரடியாக கொண்டு வரலாம்' என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், 'முதல் அமைச்சர் விஜயின் தொலைநோக்குமிக்க தலைமையின் கீழ், தமிழகத்தை இந்தியாவின் முதலீடு மற்றும் புதுமைகளின் மையமாகத் திகழச் செய்ய நாங்கள் உறுதியுடன் உள்ளோம். எதிர்காலம் இங்கேயே உள்ளது. தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்' என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் கீர்த்தனாவின் இந்த ரீல்ஸ் வீடியோ, முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளதுடன், அரசின் வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான செயல்பாடுகளை முன்னிறுத்துகிறது. 21 நாட்களில் விரைவான அனுமதி மற்றும் ஒற்றைச் சாளர ஒப்புதல்கள் போன்ற அறிவிப்புகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளன.
தொழில் துறை அமைச்சரின் இந்த ரீல்ஸ் வீடியோவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. அரசின் செயல்பாடுகளை விளம்பரப்படுத்தும் இந்த முயற்சிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம், இந்த அறிவிப்புகள் எந்த அளவிற்கு நடைமுறைக்கு வரும் என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.