MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முந்தைய ஆட்சி முறைகேடுகள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட மின்னஞ்சல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > முந்தைய ஆட்சி முறைகேடுகள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட மின்னஞ்சல்
தமிழ்நாடு

முந்தைய ஆட்சி முறைகேடுகள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட மின்னஞ்சல்

Admin
Last updated: July 1, 2026 2:09 pm
Admin
Share
SHARE

தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முந்தைய ஆட்சியின் போது பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தமிழ்நாடு அரசின் நிர்வாகம் மிக நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் மையப்படுத்தப்பட்ட ஊழல்கள், திட்டமிடப்பட்ட விதிமீறல்கள், நிர்ணயிக்கப்பட்ட லஞ்சத்தொகை எனப் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளின் ஒப்பந்ததாரர்களிடம் அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள், அவர்களின் குடும்ப உறவுகள், மற்றும் நெருக்கமானவர்கள் எனப் பலரிடமும் ஒப்பந்தம் தருவதாக வாக்குறுதி அளித்து பணம் பெற்றதாகவும், ஆனால் பலரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு முறையாக வேலைகளை ஒதுக்காமல் ஏமாற்றியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பல புகார்கள் தற்போது வந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுபோல் பாதிக்கப்பட்டவர்களோ, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களோ புகார் கொடுக்க விரும்பினால், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் நேரடியாகவோ அல்லது லஞ்ச ஒழிப்பு (DVAC) காவல்துறையினரிடமோ புகார் கொடுக்கலாம். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் minister.pwd.hd.tn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், அவர்களுக்குத் தேவையான சட்டப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும், விரைவில் அவர்கள் இழந்த பணத்தை மீட்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாது என்றும், ஒப்பந்தங்கள் அனைத்தும் நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெறும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Adhav Arjunaஅமைச்சர் ஆதவ் அர்ஜுனாதமிழ்நாடு அரசுபொதுப்பணித்துறைமுறைகேடு புகார்லஞ்ச ஒழிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸ்: பிசிசிஐ அனுமதி கிடைக்குமா?
Next Article மகாகலைஞன் விசுவின் பிறந்தநாள்: ‘சம்சாரம் அது மின்சாரம்’ உருவான கதை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்தியா-பாகிஸ்தான்: கைதிகள் பட்டியல் பரிமாற்றம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஆண்டுதோறும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1…

July 1, 2026

மகனைக் கண்டுகொலை: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியைக் கைது செய்தது போலீஸ்

சென்னையில், மகன் கண் முன்னே கணவரை மனைவியே…

July 1, 2026

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பயங்கரம்: லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த…

July 1, 2026

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும்…

July 1, 2026

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது…

June 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் அரசியல் கட்சிகளின் தலையீடு ஏன்? வானதி சீனிவாசன் கேள்வி

அரசுப் பள்ளிகளில் அரசியல் கட்சிகளின் தலையீடு குறித்தும், சிறுவர்களை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தும் 'ரீல்ஸ்' மோகம் குறித்தும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம்: மத்திய அரசே வில்லன் – வைகோ

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசே வில்லனாக செயல்படுகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். காவிரி நீர் உரிமையை பாதிக்கும் எந்த செயலையும் எதிர்ப்போம் என…

0 Min Read
தமிழ்நாடு

குற்றாலத்தில் தாயை பிரிந்த குட்டி யானை மீட்பு: வனத்துறையினர் தீவிர முயற்சி!

தென்காசி குற்றாலம் அருகே தாயை பிரிந்து தவித்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டுள்ளனர். தாய் யானையுடன் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1 Min Read
தமிழ்நாடு

விஜய் ஒளிப்பதிவாளருக்கு தமிழ்நாடு அரசுப் பொறுப்பு

நடிகர் விஜய்யின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுக்கு தமிழ்நாடு அரசு, எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?