MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மேகேதாட்டு அணை: முதல்வர் விஜய் பேசுவாரா? – கே.என்.நேரு கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - மேகேதாட்டு அணை: முதல்வர் விஜய் பேசுவாரா? – கே.என்.நேரு கேள்வி

அரசியல்

மேகேதாட்டு அணை: முதல்வர் விஜய் பேசுவாரா? – கே.என்.நேரு கேள்வி

Admin
Last updated: மே 24, 2026 5:26 மணி
Admin
Share
SHARE

மேகேதாட்டுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை மத்திய அரசிடம் வழங்கப் போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இதற்காகவாவது தமிழக முதல்வர் விஜய் வாய் திறந்து பேசுவாரா என மக்கள் காத்திருக்கிறார்கள் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்று டி.கே.சிவகுமார் சொல்லி இருப்பது அவரது ஆணவப் போக்கைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது என்ற எண்ணத்தில் சிவக்குமார் இப்படி பேசி இருப்பது போலத் தெரிகிறது. தங்களது காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எதிர்ப்பு இருக்காது என்று நினைத்து, துடுக்குடன் வார்த்தைகளை விட்டுள்ளார் அவர்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'மேகேதாட்டுவில் அணை கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக சிவக்குமார் சொல்லி இருக்கிறார். காவிரி நதியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட திமுக தலைவர் ஸ்டாலின் எந்தவிதத் தியாகம் செய்யவும் தயங்க மாட்டார். மேகதாது அணையை கர்நாடகம் கட்டுவது என்பது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப்பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி தற்பொழுது மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தினை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.' என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

'காவிரி உரிமைகளை நசுக்கும் விதமாக அமைந்துள்ள கர்நாடக மாநில துணை முதல்வரின் பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதல்வர் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டின் போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகி விடக்கூடாது. காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஒலிக்கிறது, ஒரே உணர்வில் இயங்குகிறது என்பதை, முதல்வர் விஜய் தங்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக அரசுக்கு அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்டும் அவர்களது முயற்சியை துவக்கத்திலேயே முறியடிக்க வேண்டும். இப்போதாவது – இதற்காகவாவது தமிழக முதல்வர் வாய் திறந்து பேசுவாரா என மக்கள் காத்திருக்கிறார்கள்' என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்கர்நாடகாகாவிரிகே.என்.நேருமுதல்வர் விஜய்மேகேதாட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீட் தேர்வு ரத்து விரக்தியில் மாணவி தற்கொலை: கலபுராகியில் சோகம்
Next Article ஐபிஎல் 2026: வைபவ் சூர்யவன்ஷி டி20 வரலாற்றில் புதிய சாதனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ஆளுநர் உரை ரீல்ஸ் போடவே: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரை குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஆளுங்கட்சியினர் 'ரீல்ஸ்' போடுவதற்கான கண்டெண்ட் மெட்டீரியலாக இந்த…

1 Min Read
அரசியல்

முதல்வருக்கு 6 மாதம் அவகாசம்: கமல்ஹாசன் வலியுறுத்தல்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: பழைய நடைமுறையே தொடரும் – அமைச்சர்

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பழைய நடைமுறையே தொடரும் என அமைச்சர் அறிவித்துள்ளார். மதவாத சக்திகள் அரசியல் செய்வதை அரசு அனுமதிக்காது என்றும், மக்கள் அமைதியை விரும்புவதே முக்கியம்…

1 Min Read
சினிமா

இயக்குனர் பாரதிராஜாவுக்கு முழு அரசு மரியாதை: முதல்வர் விஜய்க்கு குடும்பத்தினர் நன்றி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. முதல்வர் விஜய்க்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?