MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: போஜ்சாலா சரஸ்வதி சிலை: லண்டனிலிருந்து மீட்க ம.பி முதல்வர் மோகன் யாதவ் உறுதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: போஜ்சாலா சரஸ்வதி சிலை: லண்டனிலிருந்து மீட்க ம.பி முதல்வர் மோகன் யாதவ் உறுதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - போஜ்சாலா சரஸ்வதி சிலை: லண்டனிலிருந்து மீட்க ம.பி முதல்வர் மோகன் யாதவ் உறுதி

இந்தியா

போஜ்சாலா சரஸ்வதி சிலை: லண்டனிலிருந்து மீட்க ம.பி முதல்வர் மோகன் யாதவ் உறுதி

Admin
Last updated: மே 16, 2026 2:29 மணி
Admin
Share
SHARE

மத்தியப்பிரதேசத்தின் தார் நகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க போஜ்சாலா வளாகம், இந்துக்களால் வாக்தேவி (சரஸ்வதி) கோயிலாகவும், முஸ்லிம்களால் மவுலானா கமலூத்தீன் மசூதியாகவும் உரிமை கோரப்பட்டு வந்தது. இந்த நீண்டகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போஜ்சாலா ஒரு வாக்தேவி கோயிலே என்றும், அங்கு முஸ்லிம்களின் தொழுகை நிறுத்தப்பட வேண்டும் என்றும் மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. மேலும், லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள வாக்தேவி சிலையையும் போஜ்சாலாவில் நிறுவ வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள ம.பி முதல்வர் மோகன் யாதவ், சரஸ்வதி சிலையை மீட்டு வந்து போஜ்சாலாவில் நிறுவ சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், 'மன்னர் போஜ், வாக்தேவி திருவுருவத்தின் மூலம் இந்த இடத்தின் முக்கியத்துவத்தை நிலைநாட்டினார். நீதிமன்றம் அதை அங்கீகரித்துள்ளது. போஜ்சாலாவின் பெருமையை மீட்டெடுக்கும் வகையில், வெளிநாட்டிலிருந்து வாக்தேவி சிலையைத் திரும்பக் கொண்டுவருவதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் செய்யப்படும். அயோத்தி கோயில் தீர்ப்பு சமூக நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக அமைந்தது. அந்த மரபைப் பின்பற்றி, போஜ்சாலா தீர்ப்பையும் ஏற்பதன் மூலம் மத்தியப் பிரதேசம் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும்' எனத் தெரிவித்தார்.

இந்த தீர்ப்பை விஷ்வ இந்து பரிஷத் வரவேற்றுள்ளது. அதன் சர்வதேசத் தலைவர் அலோக் குமார், 'போஜ்சாலா மீதான இந்தத் தீர்ப்பு, இந்தியாவின் கலாச்சார உணர்வு, உண்மை மற்றும் சனாதன மரபு ஆகியவற்றிற்கு அளிக்கப்பட்ட ஒரு முக்கிய அங்கீகாரம். இது முறையான நீதித்துறை செயல்முறைகளைப் பின்பற்றியே வெளியாகி உள்ளது. போஜ்சாலா சரஸ்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கோவில் மற்றும் சமஸ்கிருத கல்விக்கான மையமாக திகழ்ந்தது என நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது' என்று கூறினார். இந்து தரப்பு மனுதாரர் ஆஷிஷ் கோயல், 'வரலாற்றுச் சூழல்களின் காரணமாகவே போஜ்சாலாவில் தொழுகை நடத்தும் வழக்கம் உருவானது. இந்த உண்மையை நிலைநாட்ட நாங்கள் நீண்ட காலமாகப் போராடி வந்தோம்' என்றார்.

முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் இந்த தீர்ப்பின் மீது கருத்து தெரிவிக்கையில், 'போஜ்சாலா இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள வரலாற்றுச் சின்னம். அத்தகைய சின்னத்திற்குள் இந்து முறைப்படி பூஜையோ அல்லது இஸ்லாமிய முறைப்படி தொழுகையோ நடத்த அனுமதிக்கப்படுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கே உண்டு. வாரணாசி கியான்வாபி, சம்பல் ஷாஹி ஜாமா மசூதி, மதுரா கிருஷ்ண ஜென்மபூமி – ஷாஹி ஈத்கா வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன' என சுட்டிக்காட்டினார்.

1875ல் பிரிட்டிஷ் பிரதிநிதி மேஜர் ஜெனரல் வில்லியம் கைக் நடத்திய அகழ்வாராய்ச்சியில் வாக்தேவி சிலை கண்டெடுக்கப்பட்டது. 1903ல் கர்சன் பிரபு அதை லண்டன் அருங்காட்சியகத்தில் வைத்தார். 128.5 செ.மீ உயரமும், 58.6 செ.மீ அகலமும் கொண்ட இந்த 250 கிலோ எடைள்ள சிலை, நான்கு கரங்களுடன், நேர்த்தியான கிரீடம் மற்றும் சிகை அலங்காரத்துடன் தெய்வீகத் தன்மையுடன் காட்சியளிக்கிறது. சிலை அடிப்பாகத்தில் உள்ள சமஸ்கிருத கல்வெட்டு, வரருச்சி என்பவர் வாக்தேவி சிலை உட்பட மூன்று சிலைகளைச் செதுக்கப் பணித்ததாகக் கூறுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Madhya PradeshSaraswati idolசரஸ்வதி சிலைபோஜன் யாதவ்போஜ்சாலாவரலாற்று சின்னம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஈரோடு: 70 டன் ரயில் பெட்டி கிரேனில் இருந்து விழுந்து விபத்து!
Next Article முதல்வர் விஜய்யின் அதிரடி: தலைமைச் செயலகத்தில் புதிய கலாச்சாரம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வாழை மரத்தில் குளவி கூடு

வாழை மரத்தை வெட்டியபோது குளவி கொட்டி சிறுவன் பலி

வாழை மரத்தை வெட்ட முயன்றபோது குளவி கூடு கலைந்து, 8 வயது சிறுவன்…

ஆகஸ்ட் 15, 2026

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு…

ஆகஸ்ட் 15, 2026

வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி அவமதித்தாரா? – பாஜக குற்றச்சாட்டுக்கு காங். மறுப்பு

காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழாவின் போது…

ஆகஸ்ட் 15, 2026

இந்திய வளர்ச்சியைத் தடுக்க சக்திகள் செயல்படுகின்றன: ஆர்.எஸ்.எஸ் தலைவர் எச்சரிக்கை

இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்திகள் குறித்து ஆர்.எஸ்.எஸ்…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தினத்தில் சோகம்: கொடிக்கம்பம் மின்கம்பியில் பட, ஆசிரியர் உயிரிழப்பு, 3 மாணவர்கள் காயம்

ஒடிசாவில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது, கொடிக்கம்பம்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

இந்தியா

விஜய் ஆட்சி குறித்து பவன் கல்யாண்: ‘கொஞ்சம் பொறாமைதான்!’

தமிழகத்தில் எளிதாக ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆகிவிடலாம், ஆனால் என்னால் முடியவில்லை என ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண்…

2 Min Read
பிரதமர் நரேந்திர மோடி கார்கில் வெற்றி தினம் குறித்து ட்வீட் செய்கிறார்
இந்தியா

கார்கில் வெற்றி தினம்: வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, தேசத்திற்காக போராடிய வீரமிக்க வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த நன்றியையும் புகழஞ்சலியையும் தெரிவித்துள்ளார். அவர்களின் தியாகம் என்றும் நினைவுகூரப்படும்.

1 Min Read
பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவு
இந்தியா

பஹல்காம் தாக்குதல்: ஹபீஸ் சயீதுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு

பஹல்காம் தாக்குதல் வழக்கு: ஹபீஸ் சயீதுக்கு எதிராக என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை இது…

1 Min Read
இந்தியா

இந்தியா-பாகிஸ்தான்: கைதிகள் பட்டியல் பரிமாற்றம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஆண்டுதோறும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் கைதிகள் பட்டியலை பரிமாறிக்கொள்வது வழக்கமான நடைமுறையாகும். இது இருதரப்பு உறவை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?