MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு: கோவை அதிர்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > க்ரைம் > காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு: கோவை அதிர்ச்சி
க்ரைம்

காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு: கோவை அதிர்ச்சி

Admin
Last updated: May 25, 2026 4:03 pm
Admin
Share
SHARE

கோவையில், காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய மதுபான பாட்டில்களை வீசி தீவைக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன்பாளையம் சிபிசி கார்டன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, தாளியூர் பேரூராட்சியில் பிட்டராக பணிபுரிகிறார். இவரது மகள், கோவையில் உள்ள கல்லூரியில் படிக்கும்போது சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஆனால், கார்த்திக் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதை அறிந்த இளம்பெண், அவரிடமிருந்து காதலை முறித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

காதலை ஏற்க மறுத்ததால், கார்த்திக் தொடர்ந்து அந்தப் பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கார்த்திக் தனது நண்பர்கள் 3 பேருடன் இருசக்கர வாகனங்களில் கலிக்கநாயக்கன்பாளையம் வந்து, இளம்பெண்ணின் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த அவரது தந்தை சுந்தரமூர்த்தியிடம் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர், மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பீர் மற்றும் மதுபான பாட்டில்களை வீட்டின் மீது வீசியுள்ளனர்.

அவர்கள் வீசியதில் ஒரு பாட்டில் வெடித்து, வீட்டின் போர்டிகோ பகுதியில் இருந்த ஷூ ஸ்டாண்ட் மீது விழுந்து தீப்பிடித்தது. இதில் ஷூக்கள் எரிந்து சாம்பலாகின. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாட்டில்களை வீசிவிட்டு தப்பியோடிய கும்பல் குறித்து சுந்தரமூர்த்தி தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். குடியிருப்புப் பகுதியில் நடந்த இந்த துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:coimbatoreகாதல்கோவைதமிழ்நாடு செய்திகள்மண்ணெண்ணெய் குண்டுவன்முறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காதலித்த வாலிபரை உறவினர்கள் கொடூரமாக கொலை: குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு
Next Article மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிப் கொலை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

அரசியல்

வெளிநாட்டு குடியுரிமை: வாக்களித்தோர் கைது – திமுகMP கண்டனம்!

வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 25 பேர் தமிழக தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக தகவல். திமுக எம்பி வில்சன், வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

1 Min Read
அரசியல்

கூலி உயர்வு இழு இழுப்பு: விசைத்தறியாளர்கள் கோரிக்கை

கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள், பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் கூலி உயர்வு விவகாரத்தில் சட்டப் பாதுகாப்புடன் ஒப்பந்த கூலியை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்கள்…

1 Min Read
க்ரைம்

நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்

வண்டலூர் அருகே மண்ணிவாக்​கம் கிழக்கு மாட​வீ​தி​யைச் சேர்ந்த சாந்தி வீட்டில் 24 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் திருடு போனது. இது தொடர்பாக மருமகன் தட்​சிணா​மூர்த்​தி,…

1 Min Read
தமிழ்நாடு

பேருந்தில் மயக்க மருந்து: மூதாட்டியிடம் 6.5 பவுன் நகை திருட்டு!

கோவை அருகே அரசு பேருந்தில் சக பயணியாக வந்த பெண், மூதாட்டிக்கு சாக்லேட் கொடுத்து மயக்க வைத்து, 6.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற சம்பவம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?