MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காவிரி விவகாரம்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காவிரி விவகாரம்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - காவிரி விவகாரம்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி

தமிழ்நாடு

காவிரி விவகாரம்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி

Fernandez
Last updated: ஜூலை 26, 2026 12:23 மணி
Fernandez
Share
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காவிரி விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும் காட்சி
காவிரி விவகாரம்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி
SHARE

முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். மு.க. ஸ்டாலின் கூறியது உண்மைக்கு புறம்பானது என்றும், தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாக்க அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் விஜய், 27.05.2026 அன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, காவிரி நீர் பகிர்வு, கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் மற்றும் அதனால் டெல்டா விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் 2018 தீர்ப்பு முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

மேலும், 19.06.2026 அன்று, கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் ஒருதலைப்பட்ச முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, விரிவான திட்ட அறிக்கைக்கு (DPR) ஜல் சக்தி அமைச்சகம் அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கடிதம் மூலம் பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் அனுப்பி வைத்தார். மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தகராறு சட்டம், 1956-இன் பிரிவு 4-ன் கீழ் நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், கர்நாடக அரசின் DPR-ஐ மத்திய நீர்வள ஆணையம் பரிசீலிக்கவோ, செயல்படுத்தவோ கூடாது என்றும், இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் புதிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரினார்.

தமிழ்நாடு நீர்வளத்துறை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) கூட்டங்களில் தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளை வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டிற்குரிய நீரை உரிய காலத்தில் திறந்துவிட வேண்டும் என்பதையும், கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில், மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு, 13.11.2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவும் 15.04.2026 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. கடைசி வாய்ப்பாக இருந்த மறுசீராய்வு மனு மீதும், உரிய வாதங்களை வலுவாக தி.மு.க அரசு எடுத்து வைக்கவில்லை என்றும், அதனால் அதுவும் 25.04.2026 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சுட்டிக்காட்டினார். கடந்த ஆட்சியில் நடைபெற்ற இதுபோன்ற சட்டக் குளறுபடிகளால்தான் காவிரி நதி நீர் பிரச்சினை மற்றும் மேகதாது அணை விவகாரம் மிகப்பெரிய சோதனையாக உருவெடுத்துள்ளது என்றார்.

கடந்தகால குளறுபடிகளைப் பேசுவதன் மூலம், காவிரி நதி நீர் விவகாரத்தில், மேகதாது அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக் குரலை திசைதிருப்ப தாங்கள் விரும்பவில்லை என்றும், குறுகிய அரசியல் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் அமைச்சர் கூறினார். அதே நேரத்தில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அல்லது வேறு யாரிடமிருந்தும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால், அவற்றை கருத்தில் கொள்ளவும், ஏற்கவும் தாங்கள் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காவிரி நீர் உரிமை என்பது அரசியல் சார்ந்த பிரச்சனை அல்ல, அது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமை, டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் நீராதார பாதுகாப்புடன் தொடர்புடைய அடிப்படை உரிமைப் பிரச்சினை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தினார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் முழுமையாக அமல்படுத்தப்படும் வரையிலும், தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்படும் வரையிலும், சட்டப்பூர்வமான மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் தொடர்ந்து செயல்படும் என்றும், காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும் என்றும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கும் என்றும் அவர் தனது பதிவில் உறுதியளித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Adhav ArjunaCauveryKaveriMegadathuMK StalinTamil Nadu GovtVIJAYஆதவ் அர்ஜுனாகாவிரிதமிழ்நாடு அரசுமு.க. ஸ்டாலின்மேகதாதுவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி இலங்கை டெஸ்ட்: இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி விலகல் – பிசிசிஐ தகவல்
Next Article ஹுண்டாய் பேயோன் கிராஸ் ஓவர் எஸ்யூவி ஹுண்டாய் பேயோன் கிராஸ் ஓவர் எஸ்யூவி: ரூ.8 லட்சத்தில் புதிய மாடல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்கியா

பதவி விலக தர்மேந்திர பிரதான் தயார்: கைலாஷ் விஜயவர்கியா தகவல்

மாணவர் போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது…

ஜூலை 26, 2026

கருங்கடலில் இந்திய கப்பல் பணியாளர்களுக்கு அரசு எச்சரிக்கை

கருங்கடல் பகுதியில் கப்பல் பணியில் ஈடுபடும் இந்தியர்கள்…

ஜூலை 26, 2026

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்பு

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்றார்.…

ஜூலை 26, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா புதிய உச்சம்: பிரதமர் மோடி பெருமிதம்

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா…

ஜூலை 26, 2026

டெல்லி போராட்டம் அரசுக்கு சவால் – உத்தவ் தாக்கரே

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம்,…

ஜூலை 26, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறினார்: பி.வில்சன் எம்.பி குற்றச்சாட்டு

முதல்-அமைச்சர் விஜய் தனது ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறிவிட்டதாக பி.வில்சன் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் வகிக்கும் பதவி என்னவென்று தெரியவில்லை…

1 Min Read
தமிழ்நாடு

நெல்லை: தொடர் மழையால் பாபநாசம் அணை 100 அடியை எட்டியது

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் கனமழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 114.17 அடியாக உள்ளது.

1 Min Read
வானிலை ஆய்வு மையம் மழை அறிவிப்பு
தமிழ்நாடு

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் இன்று மாலை வரை மழை!

சென்னை உள்பட தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்…

1 Min Read
தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்த செய்தியாளர் சந்திப்பு
தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் தயக்கம்!

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக வேட்பாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். முதல்வர் விஜய்யை எதிர்த்துப் போட்டியிடுவதில் உள்ள சிரமம் மற்றும் தேர்தல் செலவுகள் காரணமாக இந்த…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?