கரூர் உயிரிழப்பு: 41 குடும்பங்களுக்கு அரசு வேலை – விஜய் வழங்குகிறார் பணி ஆணை

கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு வேலைக்கான ஆணை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2025 செப்டம்பரில் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு த.வெ.க. சார்பில் தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்த த.வெ.க. தலைவர் விஜய், ஆறுதல் கூறினார். தேர்தலுக்குப் பிறகு நேரில் வந்து சந்திப்பதாக அவர் உறுதியளித்திருந்தார்.

சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், முதல்வர் விஜய் கரூர் செல்லவில்லை என எதிர்க்கட்சிகள் புகார் கூறி வந்தன. இந்நிலையில், வரும் ஜூலை 10ஆம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்லவுள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு, தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் பணி ஆணைகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வு, த.வெ.க. அரசின் மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்றும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version