நடிகர் கார்த்தியின் 30வது படத்தின் பூஜை ஐதராபாத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கார்த்தி மற்றும் மீனாட்சி சௌத்ரி நடிப்பில் கல்யாண் சங்கர் இயக்கும் இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கிறது. தெலுங்கில் 'மேட்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கல்யாண் சங்கர், முதல் படத்திலேயே வெற்றி கண்டவர். தற்போது கார்த்தியின் 30வது படத்தை அவர் இயக்க உள்ளார்.
படத்தின் பூஜை ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. தற்போது படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் தீவிரமாக படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர் கார்த்தியின் பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூர்யாவைத் தொடர்ந்து கார்த்தியும் நேரடி தெலுங்கு சினிமாவில் கால் பதிக்கிறார்.
சூர்யா – வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகி வரும் 'விஸ்வநாத் & சன்ஸ்' தயாரிப்பு நிறுவனமான சித்தாரா, கார்த்தியின் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற படப் பூஜையில் 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகை மீனாட்சி சௌத்ரி, நடிகர் சுனில் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தி தற்போது 'சர்தார் -2' திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இது ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இயக்குநர் தமிழ் இயக்கத்தில் 'மார்ஷல்' என்ற பெரிய பட்ஜெட் பீரியட் திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த வரிசையில் அவரது 30வது பட பூஜை இன்று நடைபெற்றுள்ளது.