MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கடையநல்லூர் அருகே 1,300 கிலோ புகையிலை பறிமுதல்: வியாபாரி கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கடையநல்லூர் அருகே 1,300 கிலோ புகையிலை பறிமுதல்: வியாபாரி கைது!
தமிழ்நாடு

கடையநல்லூர் அருகே 1,300 கிலோ புகையிலை பறிமுதல்: வியாபாரி கைது!

Admin
Last updated: May 15, 2026 10:07 am
Admin
Share
SHARE

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, பூட்டிக் கிடந்த குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,300 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய வியாபாரி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளதுடன், மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

மேல கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியில் நீண்ட நாட்களாக பூட்டிக் கிடந்த ஒரு குடோனில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவரது உத்தரவின் பேரில், புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மதன் தலைமையில், கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் மற்றும் போலீஸார் கொண்ட குழுவினர், இந்திரா நகர் பகுதியில் உள்ள அந்த குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, குடோனில் ஏராளமான மூட்டைகளில் மொத்தம் 1,300 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் புகையிலை பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த குடோனில் இருந்து புகையிலை மூட்டைகளை போலீஸார் கைப்பற்றி, மேல் நடவடிக்கைகளுக்காக கொண்டு சென்றனர்.

மேலும் நடத்திய விசாரணையில், கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த வியாபாரி சக்திவேல் (50 வயது) என்பவர், இந்த புகையிலை பொருட்களை வாங்கி வந்து குடோனில் பதுக்கி வைத்து, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் சக்திவேலை கைது செய்தனர். இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய சக்திவேலின் உறவினரான வைரமுத்து (41 வயது) என்பவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:crimeKadaiyanallurpoliceTobaccoதென்காசிபுகையிலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ராமேஸ்வரம் கோவில்: ₹3.5 கோடி லட்டு மோசடி – 9 பேர் மீது நடவடிக்கை!
Next Article ஸ்டாலின் திருச்சி கிழக்கில் போட்டியிட தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உன்னாவ் வழக்கு: பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிர்ச்சி!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார்…

May 15, 2026

மத்திய அமைச்சர் மகன் மீது போக்சோ வழக்கு: பரபரக்கும் தெலங்கானா!

தெலங்கானாவில் மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சயின்…

May 15, 2026

நாகலாந்தில் 14 பேர் மீட்பு: பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கை!

நாகலாந்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய மீட்புப் பணியில்,…

May 15, 2026

நீட் தேர்வு ஊழல்: ராகுல் காந்தி அதிர்ச்சி தாக்குதல்!

நீட் தேர்வு ஊழல்களால் மாணவர்கள் உயிரை மாய்த்துக்…

May 15, 2026

உச்ச நீதிமன்றத்தில் வீடியோ கான்ஃபரன்ஸ் விசாரணை: செலவு குறைப்பு நடவடிக்கை!

மேற்காசிய போர் பதற்றம் காரணமாக செலவுகளைக் குறைக்க,…

May 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திமுக சட்டமன்ற குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு

தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 7-ம் தேதி…

0 Min Read
தமிழ்நாடு

நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்... தமிழ்நாட்டில் நாளை காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் - அரசு தேர்வுத்துறை…

0 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் இளைஞர் கொடூர கொலை: காவல்துறை விசாரணை

தூத்துக்குடி அம்பேத்கர்நகர் முல்லைநகர் கல்லறைத் தோட்டத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

அதிமுகவின் சட்டமன்ற குழுத் தலைவர் யார்? – சபாநாயகரின் முடிவு என்னவாக இருக்கும்?

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை அடுத்து, சட்டமன்ற குழுத் தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சபாநாயகரிடம் உள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?