கடக ராசி நேயர்களே! பராபவ வருடம் ஆனி மாதத்தில் கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன. மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே குரு பகவான் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால், பல வழிகளிலும் நன்மை ஏற்படும். நினைத்தது நிறைவேறும். நேசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி, நிலைமை சீராகி நிம்மதி காண்பீர்கள்.
தொழில் போட்டிகள் அகலும். வர்த்தக கூட்டாளிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சமரசமாக முடியும். ரிஷப ராசியிலிருந்து செவ்வாய் பகவான் ஆனி மாதம் 5-ந் தேதி (19.6.2026) அன்று கடக ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், லாப ஸ்தானத்திற்கு வருவது யோகமானதாகும். தொழில் ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்திற்கு வருவதால் தொழிலில் முன்னேற்றமும், கூடுதல் லாபமும் கிடைக்கும். வாடகை கட்டிடத்தில் நடத்தும் தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்ற கவலை இனி வேண்டாம். இப்பொழுது நல்ல நிறுவனங்களில் இருந்து கூடுதல் சம்பளம் தருவதாக சொல்லி அழைப்புகள் வரலாம். ஜாதகம் பலம் பெற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்ளலாம். பொது நலத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரத்துவ யோகம் உண்டு. சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரன், ஆனி 21-ந் தேதி (5.7.2006) அன்று கடக ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 1, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்கிரன், குடும்ப ஸ்தானத்திற்கு வரும்போது குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ஆனி 31-ந் தேதி (15.7.2026) அன்று மீனம் ராசியில் சனி பகவான் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், குருவின் பார்வையால் பெரிய அளவில் பாதிக்கப்படமாட்டார். இருப்பினும், எதிரிகளின் தொல்லை இருக்கத்தான் செய்யும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. பண நெருக்கடி அதிகரிக்கும். சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 3, 6, 11 ஆகிய இடங்களில் பதிவதால், முன்னேற்றப் பாதையில் இருந்த இடையூறுகள் அகலும். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்போடு சில பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைஞர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டு. மாணவ மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு சுபச் செய்திகள் வந்து சேரும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும்.