கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றங்கள் நிறைந்ததாக இருக்கும். ராசியில் குரு மற்றும் சுக்ரன் சேர்க்கை இருப்பதால், தடைபட்ட அனைத்து விதமான பாக்கியங்களையும் அனுபவிக்கும் யோகம் உண்டாகும். மன உறுதி, தைரியம், நேர்மறை எண்ணங்கள் மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மை அதிகரிக்கும். திட்டமிட்டு கடமைகளை நிறைவேற்றுவீர்கள்.
ஆயுள் ஆரோக்கியம் கூடும், மருத்துவ செலவுகள் குறையும். கௌரவப் பதவிகள் உறுதியாகும். பொருளாதார மேன்மையும் செல்வப் பெருக்கமும் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். புத்திர பிராப்தம் மற்றும் பேரன், பேத்தி யோகம் கிடைக்கும்.
பாகப் பிரிவினையால் ஏற்பட்ட மன பேதங்கள் சீராகும். சிலர் உயில் எழுதுவார்கள். பெண்களுக்கு, பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவத்தை ஏற்படுத்தும். மன அமைதி மற்றும் நிம்மதிக்காக சிலர் தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். சிறிய வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் வசதியான வீட்டிற்கு குடிபெயரலாம்.
சக்திக்கு மீறிய கடன் வாங்குவதையும், தேவையற்ற பேச்சுகளையும் குறைத்து, இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். திங்கட்கிழமை அன்று பச்சரிசி தானம் வழங்கினால் நல்லது. தொடர்புக்கு: ‘பிரசன்ன ஜோதிடர்’ ஐ.ஆனந்தி, செல்: 98652 20406.