MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தவெக விவகாரம்: ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் இடையே வார்த்தை மோதல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தவெக விவகாரம்: ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் இடையே வார்த்தை மோதல்!

அரசியல்

தவெக விவகாரம்: ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் இடையே வார்த்தை மோதல்!

Admin
Last updated: மே 26, 2026 10:04 மணி
Admin
Share
SHARE

காங்கிரஸ் கட்சியில் குதிரை பேர அரசியலை யார் நியாயப்படுத்தினாலும் அது தவறு என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, 'திடீரென சில தோழமை சுட்டுதல் நிபுணர்கள் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டனர்' என மற்றொரு காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்கம் தாகூர் எதிர்வினையாற்றியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில், 'தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. ஆட்சியில் பங்கெடுத்திருக்கிறது. தமிழக மக்களுக்கு சிறப்பான ஆட்சியை தருவதற்கு நிச்சயம் அவருக்கு நாம் துணை நிற்போம். ஆனால், அதற்காக தவெக தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் ஆதரிக்க முடியாது. குதிரை பேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது. இந்தியாவில் ஜனநாயகத்தை, காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம். தமிழகத்தில் குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழகத்துக்கு வெளியே எதிர்க்கும் என்ற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்க முடியாது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாக காங்கிரஸ் செயல்பாடுமேயானால் அது காந்திக்கும், நேருவுக்கும், கொண்ட கொள்கைக்கும் செய்கிற வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும். ராகுல் காந்தி கொள்கைக்காக சமரசமற்று போராடி வரும் சூழலில் அந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது' என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மாணிக்கம் தாகூர் எம்.பி, '23-ம் தேதி காங்கிரஸ் ஒழிக… ராகுல் காந்தி ஒழிக என ஸ்டாலின் முன்னிலையில் கோஷம். காங்கிரஸை ஒட்டுண்ணி, துரோகி என்று உதயநிதி அணி தீர்மானம். 25-ம் தேதி காங்கிரஸின் போலி பாஜக எதிர்ப்பும் பல்லிளிக்கிறது என்று ஸ்டாலின் தாக்குதல். அப்போது அமைதி. ஒரு எக்ஸ் போஸ்ட் கூட இல்லை. ஒரு சத்தம் இல்லை. ஒரு கண்டனம் கூட இல்லை. ஆனால், இன்று திடீரென சில தோழமை சுட்டுதல் நிபுணர்கள் வந்து அறிவுரை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க' என சாடினார்.

மாணிக்கம் தாகூரின் இந்த எதிர்வினைக்கும் பதிலளித்த ஜோதிமணி எம்.பி, 'தவெக என்ற ஒரு கட்சி உருவாவதற்கு முன்பு இந்த திடீர் திமுக எதிர்ப்பாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று வரலாறு சொல்லும். காமராஜருக்காகக் கூட வாய் திறக்காமல் அவ்வளவு பயம்! நாம் எதிர்க்க வேண்டியது பாஜகவை. சக கட்சிக்காரர்களை அல்ல. காங்கிரஸ் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆதரிக்க வேண்டிய விஷயங்களை ஆதரிப்பதும், எதிர்க்க வேண்டிய விஷயங்களை எதிர்ப்பதும், கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதும்தான் ஒரு உண்மையான காங்கிரஸ் தொண்டரின் கடமை. அப்பொழுதுதான் காங்கிரஸ் தனித்தன்மையையும், மதிப்பையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். அதிகாரத்துக்கு நெருக்கமாக காட்டிக் கொள்வதற்காக காங்கிரஸ் அடிப்படை கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள முடியாது. செய்யவும் மாட்டேன். அதேபோல யாரிடமிருந்தும் எனது நம்பகத்தன்மைக்கு எந்த சான்றிதழும் தேவையில்லை. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வோம்' என்று ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்காங்கிரஸ்தவெகமாணிக்கம் தாகூர்ஜோதிமணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 50 திரிணமூல் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய தயார்: எம்.பி சவுமித்ரா கான்
Next Article ரஷ்யாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி ஏழுமலையான் கோவில்

திருப்பதியில் ஒரே நாளில் 88,000 பக்தர்கள் தரிசனம்: ரூ.5 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 88,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம்…

ஜூலை 7, 2026

முதல்-அமைச்சர் விஜய்க்கு கரூர் செல்ல தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு எந்த தடையும்…

ஜூலை 7, 2026

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

You Might Also Like

அரசியல்

பிஎம்ஸ்ரீ திட்டம்: தமிழக அரசு நிலைப்பாடு என்ன? அமைச்சர் விளக்கம்

மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம் தொடர்பாக தமிழக அரசு விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

புதிய சட்டப்பேரவை கூட்டத்தொடர்: திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை

புதிய அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு, திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று (ஜூன் 17) அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்கின்றனர். ஆளுநர் உரை,…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

திருச்சி கிழக்கு: முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு

திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும்…

1 Min Read
அரசியல்

விஜய்க்கு சண்முகம் பதிலடி: ஆதரவு தராவிட்டால் பதவியேற்பு விழா நடந்திருக்காது

தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்ததன் முக்கியத்துவத்தை சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் விளக்கியுள்ளார். ஆதரவு தராவிட்டால் பதவியேற்பு விழா நடந்திருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?