சட்டமன்றத்தை படப்பிடிப்பு தளமாக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
‘சார் நான் ஒரு ஆக்ஷன் பண்ணிக்கலாமா!?’ என்று நடிகர் விஜய் நடிப்பைப் பாராட்டிய ஜெயக்குமார், ‘நாளைய தீர்ப்பு’ முதல் தற்போது முதல்வர் ஆனது வரை விஜய்யின் நடிப்பு நன்றாக வளர்ந்துள்ளது என்றும் வாழ்த்தியுள்ளார். ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவது, விசில் அடிப்பது, குட்டிக் கதை சொல்வது என சட்டமன்றத்தை படப்பிடிப்பு தளமாக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘5 நிமிஷம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல’ என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, நாங்களும் அதையே தான் சொல்கிறோம். மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றி ஒரு 5 நிமிடமாவது பேசுங்கள். ரீல்ஸை விட்டுவிட்டு யதார்த்தத்திற்கு வாருங்கள் என்று ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த கருத்து, தற்போதைய அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சட்டமன்ற நடவடிக்கைகளை படப்பிடிப்பு தளம் போல மாற்றுவது குறித்த அவரது விமர்சனம், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.