தஞ்சையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து பேசிய இரட்டை அர்த்தப் பேச்சு அருவருப்பானது மற்றும் வெட்கக்கேடானது என்று பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'தஞ்சாவூரில் திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின், முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்த இரட்டை அர்த்தப் பேச்சு அருவெறுக்கத்தக்கது, ஆபாசமானது, கேவலமானது, வெட்கக்கேடானது. உண்மையில் தாய், மனைவி, மகள் உள்ள எந்த ஒரு சாதாரண மனிதனும் இப்படி கேவலமாக பேச மாட்டான். அப்படி பேசுபவர்களை எந்த தாயும், மனைவியும், மகளும் மன்னிக்க மாட்டார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது பதிவில், 'திராவிட மாடல்' என்று சொல்லிக்கொண்டு இப்படிப்பட்ட கேடுகெட்ட ஜென்மங்கள் பொதுவெளியில் பேசுவதை, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்றும் தெரிவித்துள்ளார்.
'மார்க்கண்டேயனை கைது செய்ததை விட, இந்த தரங்கெட்ட பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலினை கைது செய்து சிறையில் அடைப்பது முதலமைச்சர் விஜய்க்கு பெருமை சேர்க்கும்' என்றும் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இந்த இரட்டை அர்த்தப் பேச்சுக்கு நீதிமன்றங்கள் தண்டனை அளிக்குமா அல்லது பிணை வழங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். உதயநிதியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பாஜக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்புள்ளது. இது குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
