இஸ்ரேல் நாட்டின் உள்துறை பாதுகாப்பு அமைச்சரான இதாமர் பென்-கிவீர் பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைய அந்நாட்டு அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ உத்தரவை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோல் பரோட் வெளியிட்டுள்ளார்.
காசா பகுதிக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற 'குளோபல் சுமூத் புளோட்டிலா' என்ற கப்பலின் குழுவினரை இஸ்ரேலிய ராணுவம் கடலில் வைத்து கைது செய்ததைக் கண்டிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திடீர் தடை இஸ்ரேல்-பிரான்ஸ் இடையேயான உறவில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. சர்வதேச அளவில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
மேலும் இது போன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.