சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினசரி யோகா பயிற்சி மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கும் மன அமைதிக்கும் மிகவும் இன்றியமையாதது என அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
யோகாசனங்கள் மூலம் உடல் நலத்தையும் மன நலத்தையும் ஒருங்கே பேண முடியும் என்பதை வலியுறுத்திய அவர், அனைவரும் யோகாவை தங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த சர்வதேச யோகா தினம், அனைவருக்கும் ஆரோக்கியத்தையும் அமைதியையும் கொண்டு வரட்டும் என வாழ்த்தியுள்ளார்.