MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வரை நெருங்கவிடாமல் உளவுத்துறை ரிப்போர்ட்: அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் அதிரடி முடிவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வரை நெருங்கவிடாமல் உளவுத்துறை ரிப்போர்ட்: அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் அதிரடி முடிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வரை நெருங்கவிடாமல் உளவுத்துறை ரிப்போர்ட்: அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் அதிரடி முடிவு

தமிழ்நாடு

முதல்வரை நெருங்கவிடாமல் உளவுத்துறை ரிப்போர்ட்: அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் அதிரடி முடிவு

Admin
Last updated: ஜூலை 2, 2026 4:42 மணி
Admin
Share
SHARE

புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், உளவுத்துறையின் ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டார். வடக்கு மண்டல ஐ.ஜியாக பணியாற்றி வந்த அவரை, உளவுத்துறையில் நியமித்தது த.வெ.க. அரசு. இந்த நியமனம், அறிந்த அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தது. எதிர்பார்த்தபடியே, மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தி, உளவுத்துறையில் பல சீர்திருத்தங்களையும் அஸ்ரா கார்க் கொண்டுவந்தார்.

மேலும், சில அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரைத்து, அவர்கள் குறிப்பிட்ட பணிகளுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அமைச்சர்களின் புரோட்டோகாலை மீறும் சில அதிகாரிகளால், பாதுகாப்பு அதிகாரிகள் குழப்பமடைந்து, பாதுகாப்பில் குளறுபடிகள் ஏற்படுவதாகவும், அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தும், அது கண்டுகொள்ளப்படவில்லை.

இந்த விஷயங்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றபோது, அது நேரடியாக முதல்வரை சென்றடையவில்லை. அரசின் அத்தியாவசியமான ரகசியங்களைக்கூட முதல்வரிடம் நேரடியாக தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அரசுக்கு தொடர்பில்லாத குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கம் மட்டுமே அரசுக்குள் இருப்பதாக அவர் உணர்ந்தார். இந்த சூழலில் எப்படி பணி செய்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உளவுத்துறைக்கும் முதல்வருக்கும் இடையேயான இந்த இடைவெளி அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. உளவுத்துறையின் குறிப்புகள் முதல்வருக்கு நேரடியாக செல்வதில்லை. அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் பெயரை பயன்படுத்தி செயல்படும் நபர்கள் பற்றியும் அறிக்கைகளில் எழுதப்பட்டிருந்தாலும், அவை அரசிற்கு தொடர்பில்லாத நபர்களால் பிரிக்கப்பட்டு, அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. இந்த நிலை நீடித்தால் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என அஞ்சிய அஸ்ரா கார்க், மத்திய அரசு பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Asra Garg IPSஅஸ்ரா கார்க்உளவுத்துறைஐ.பி.எஸ்த.வெ.க அரசுதமிழ்நாடு காவல்துறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இடைத்தேர்தல் நடத்தக்கூடாது: தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
Next Article ஜனாதிபதி மாளிகையில் ஜப்பான் பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை தடுப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ப. ரவிச்சந்திரன் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த…

1 Min Read
தமிழ்நாடு

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதே இலக்கு – மாணிக்கம் தாகூர்

தமிழக காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் வலுவான இயக்கமாக மாற்றுவதே இலக்கு என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலிலும் த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் அவர்…

1 Min Read
கன்னிகைபேரில் அமோனியா வாயு அகற்றும் பணி நடைபெறும் இடம்
தமிழ்நாடு

கன்னிகைபேரில் அமோனியா அகற்றும் பணியில் தொய்வு

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேரில் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 18 பேர் உயிரிழந்த நிலையில், வாயுவை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

திருவள்ளூர் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த ஒடிசா பெண் தொழிலாளி இன்று…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?