இந்தியாவில் இன்றுவரை மர்மமாக நீடிக்கும் பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் சில, விஞ்ஞானிகளையே வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு விசித்திரமானவை. லடாக் பகுதியில் உள்ள காந்த மலை, ரெட்டையர்கள் வாழும் கோடினி கிராமம், தாஜ்மகாலின் ரகசியம், ஜோத்பூர் வெடிச்சத்தம், மற்றும் 9 மர்ம நபர்கள் என இந்த மர்மங்கள் குறித்த தகவல்களை விரிவாகக் காண்போம்.
லடாக் பகுதியில் உள்ள காந்த மலை, சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் ஒரு இடமாகும். இங்கு ஒரு விசித்திரமான நிகழ்வு நடப்பதாகக் கூறப்படுகிறது. காரை நியூட்ரலில் நிறுத்திவிட்டால், அது தானாகவே மேல்நோக்கிச் செல்லும் என்றும், சுமார் 20 கிலோமீட்டர் வேகம் வரை செல்வதாகவும் நம்பப்படுகிறது. இந்த காந்த சக்திக்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது.
கேரள மாநிலம், கோடினி கிராமம் ஒரு தனித்துவமான கிராமமாக விளங்குகிறது. இங்கு பிறக்கும் குழந்தைகள் அனைவரும் இரட்டையர்களாகப் பிறக்கின்றனர். இதுவரை 250க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் இங்கு வசிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் மட்டும் ஏன் இந்த இரட்டையர் பிறப்பு அதிகமாக நிகழ்கிறது என்பது புரியாத புதிராகவே நீடிக்கிறது.
உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹால், காதல் சின்னமாகப் போற்றப்பட்டாலும், அது உண்மையில் ஒரு சிவன் கோவில் என்றும், ஷாஜஹான் அதை தனது மனைவி மும்தாஜுக்காகக் கட்டவில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இந்த ஆய்வின்படி, தாஜ் மஹால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் காலத்திற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே அது கட்டப்பட்டதாகவும், ஷாஜஹான் ஏற்கனவே இருந்த அந்தக் கோவிலை அலங்கரித்து தனது மனைவியின் கல்லறைக்கு அர்ப்பணித்ததாகவும் கூறப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் ஜோத்பூரில், அணுகுண்டு வெடித்தது போன்ற ஒரு பெரும் சத்தம் கேட்டது. பலர் இதை விமானங்களின் காற்றழுத்த மாற்றத்தால் ஏற்பட்டதாகக் கருதினாலும், அந்த நேரத்தில் அப்பகுதியில் எந்த விமானமும் பறக்கவில்லை. இந்த சத்தம் எங்கிருந்து எழுந்தது என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. மேலும், அசோகர் காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் 9 மர்ம நபர்கள், இன்று 'இல்லுமினாட்டி' என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஒவ்வொரு துறையிலும் வல்லுனர்களாக இருப்பதாகவும், இவர்களின் வாரிசுகள் உலகம் முழுவதும் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் யார் என்பது இன்றுவரை தீர்க்கப்படாத மர்மமாகவே உள்ளது.