MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஐஸ் வியாபாரி கொலை: மைத்துனர்கள் கைது – விபத்து நாடகமும் அம்பலம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஐஸ் வியாபாரி கொலை: மைத்துனர்கள் கைது – விபத்து நாடகமும் அம்பலம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஐஸ் வியாபாரி கொலை: மைத்துனர்கள் கைது – விபத்து நாடகமும் அம்பலம்!

தமிழ்நாடு

ஐஸ் வியாபாரி கொலை: மைத்துனர்கள் கைது – விபத்து நாடகமும் அம்பலம்!

Admin
Last updated: மே 17, 2026 3:29 மணி
Admin
Share
SHARE

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், குடும்ப தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் மாமியாரை தாக்கிய ஐஸ் வியாபாரியை, அவரது மைத்துனர்கள் அடித்து கொலை செய்துவிட்டு, விபத்து நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மைத்துனர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்லடம் அறிவொளி நகரை சேர்ந்த முருகன் (45), ஐஸ் வியாபாரியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இவரது மனைவி பொன்மொழிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறின் போது, முருகனின் மனைவி பொன்மொழியின் தாய் காசி அம்மாள் (70) தலையிட்டு, மகளை சமாதானம் செய்து, முருகனை கண்டித்துள்ளார். மேலும், முருகனின் குடிப்பழக்கத்தையும் கண்டித்துள்ளார். இதனால் மாமியார்-மருமகன் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த முருகன், மாமியார் காசி அம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளார். இதில் காசி அம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த காசி அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

நடந்த சம்பவத்தை தனது மகன்களான பழனிசாமி (51) மற்றும் பாண்டியன் (41) ஆகியோரிடம் காசி அம்மாள் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், முருகன் வீட்டுக்கு சென்று, 'ஏன் எங்கள் தாயை தாக்கினாய்?' என்று கேட்டுள்ளனர். அப்போது, இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த முருகன், மைத்துனர்கள் இருவரையும் தாக்க முயன்றுள்ளார். அப்போது, பாண்டியன் அங்கிருந்த கட்டையை எடுத்து முருகனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

பயந்துபோன பழனிசாமி மற்றும் பாண்டியன், முருகன் விபத்தில் சிக்கியதாக கூறி 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முருகன், வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார், முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். விசாரணையில், மைத்துனர்களே முருகனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தாங்கள் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:crimeMurderTamil Nadu Newsகொலைதிருப்பூர் செய்திகள்பல்லடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புதுச்சேரி: காங்கிரஸ் – தவெக கூட்டணி? நாராயணசாமி பகீர்!
Next Article பிரபுதேவா, வடிவேலுவின் ‘பேங் பேங்’: ஜோம்பி ஜானரில் அதிரடி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பேனரில் பெயர் சர்ச்சை: ஆட்சியரிடம் கோபப்பட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி

விருதுநகரில் போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பதாகையில் தனது பெயர் கீர்த்தனாவிற்கு கீழ் இருந்ததால் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆட்சியரை கண்டித்தார். இது அதிகாரிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
இந்தியா

பெங்களூரில் பயங்கரம்: காதல் ஜோடி கொடூரம் – பெற்றோர், சகோதரி கொலை

பெங்களூரில் காதல் ஜோடி ஒன்று, தங்கள் காதலை ஏற்க மறுத்த தாய், தந்தை, சகோதரியை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர்…

1 Min Read
தமிழ்நாடு

ஜோசப் விஜய் அரசு: தகுதித் தேர்வு குளறுபடி குறித்து வானதி சீனிவாசன் கேள்வி!

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வில் மதிப்பெண் குளறுபடிகள் நடந்துள்ளதாக பாஜக தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.…

1 Min Read
அரசியல்

மதுரை மாநகராட்சி: 400 கோடி ஊழல் – அமைச்சர் நிர்மல் குமார் பகீர்!

மதுரை மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து விரிவான…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?