MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: “நான் இப்போது முதல்வர்… அனைவருக்கும் பொதுவானவன்!” – சுவேந்து அதிகாரி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > “நான் இப்போது முதல்வர்… அனைவருக்கும் பொதுவானவன்!” – சுவேந்து அதிகாரி
இந்தியா

“நான் இப்போது முதல்வர்… அனைவருக்கும் பொதுவானவன்!” – சுவேந்து அதிகாரி

Admin
Last updated: May 9, 2026 4:58 pm
Admin
Share
SHARE

பதவியேற்பு விழா மேடையில் சுவேந்து அதிகாரிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

கொல்கத்தா: “நான் இப்போது முதல்வராக இருக்கிறேன்; நான் அனைவருக்கும் பொதுவானவன்” என்று மேற்கு வங்கத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, “இந்த நாள் நாட்டுக்கும் மேற்கு வங்கத்துக்கும் மிகவும் முக்கியமான நாள். ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளான இன்று, புதிய அரசு பதவியேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்பினார். அதன் காரணமாக, பிரதமர் மோடியின் தலைமையில் ரவீந்திரநாத் தாகூருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பதவியேற்பு விழா நடத்தப்பட்டது.

ஜோராசங்காவில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் பிறந்த இல்லத்துக்குச் சென்று வணங்கிய பிறகே நான் எனது முதல்வர் பணிகளை தொடங்க உள்ளேன்” என தெரிவித்தார்.

தேர்தலின்போது பல்வேறு மோதல்கள் நிகழ்ந்த நிலையில், முதல்வராக உங்களது செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சுவேந்து அதிகாரி, “டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிக்கு (பாஜக) வேறு எந்தச் சான்றிதழும் தேவையில்லை. நான் இப்போது முதல்வராக இருக்கிறேன். நான் அனைவருக்கும் பொதுவானவன். தேர்தல் முடிவுகளைப் பற்றியே இன்னும் விவாதித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல புத்தி கிடைக்கட்டும்.

மேற்கு வங்கம் பெருமளவில் சீர்குலைந்துள்ளது. கல்வி சீர்குலைந்துள்ளது, கலாச்சாரம் சீர்குலைந்துள்ளது. நாங்கள் மேற்கு வங்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம். எங்கள் தோள்களில் மிகப் பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கட்டும். நாங்கள் முன்னோக்கிச் செல்வோம்” என்று தெரிவித்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக – திரிணமூல் காங்கிரஸ் இடையேயும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையேயும் மோதல்கள் நிகழ்ந்த நிலையில், சுவேந்து அதிகாரியின் எதிர்கால செயல்பாடு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், தான் அனைவருக்கும் போதுவான நபர் என அவர் கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று, அறுதிப் பொரும்பான்மையுடன் கூடிய தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மம்தா பானர்ஜி போட்டியிட்ட பபானிபூர் தொகுதியிலும், நந்திகிராம் தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றவர் சுவேந்து அதிகாரி.

பாஜகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட சவேந்து அதிகாரி, இன்று மாநில முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். சுவேந்து அதிகாரியுடன் திலிப் கோஷ், அக்னிமித்ரா பால், நிஷித் ப்ரமாணிக், அஷோக் கீர்த்தன்யா, குதிராம் டூடு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா, தர்மேந்திர பிரதான், முதல்வர்கள் மாணிக் சர்க்கார், ஹிமந்த பிஸ்வா சர்மா, ரேகா குப்தா, புஷ்கர் சிங் தாமி, யோகி ஆதித்யநாத், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்று இந்திய தேசிய கீதத்தை இயற்றிய வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் என்பதால், பதவியேற்பு விழா மேடையில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பிரதமர் மோடி, சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வி.சி.க பதவி கேட்பதாக வரும் தகவல் பொய்..!- ரவிக்குமார் எம்.பி
Next Article தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு? – திருமாவிடம் கடிதத்தை பெறும் ஆதவ் அர்ஜுனா?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அமுல் பால் விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல், நாடு முழுவதும் பால் விலையை…

May 13, 2026

காரிஃப் பயிர்கள்: மத்திய அரசு அறிவித்த புதிய குறைந்தபட்ச ஆதார விலைகள்!

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, 2026-2027 சந்தைப்படுத்தல்…

May 13, 2026

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள…

May 13, 2026

பிரிக்ஸ் மாநாடு: டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்!

புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும்…

May 13, 2026

திருமணத்தில் ஸ்விக்கி டெலிவரி: பூசாரிக்கு விறகு கொடுத்த நபர் வைரல்!

தென்னிந்திய திருமணங்கள் எப்போதும் பரபரப்புக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும்…

May 13, 2026

You Might Also Like

இந்தியா

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா, டபல்கண்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் 4 மாத குழந்தையுடன் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை குழந்தை தொட்டிலில்…

1 Min Read
இந்தியா

காஷ்மீர் ‘புல்டோசர்’ நடவடிக்கை அமைச்சர் கடும் கண்டனம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடை

1 Min Read
இந்தியா

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இரண்டு நாள் பயணமாக திருப்பதி வந்தார். அவருடன் அவரது…

1 Min Read
இந்தியா

ஆண்களை பாதிக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்: இந்தியாவில் 30 சதவீதம் அதிகரிப்பு..

`புரோஸ்டேட்’ என்பது ஆண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதி. இது சிறுநீர்ப்பைக்கு அடியில் வால்நட் அளவில் இருந்து வயதை பொறுத்து காணப்படும். பொதுவாக உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல்,…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?