தழிழக அரசு எந்தவிதமான அழுத்தங்களுக்கும் பணிந்து போகாது என்றும், முதலமைச்சரும் எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்க மாட்டார் என்றும் அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், திமுகவின் கொள்கைகள் மற்றும் மாநில உரிமைகள் குறித்துப் பேசுகிறார். ஆனால், கடந்த ஆட்சிக் காலத்தில் அவர்கள் ஊழலில் ஈடுபட்டதால், தற்போது பாஜகவின் பிடியில் சிக்கிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். அரசியல் ரீதியான தேர்தல் கூட்டணி இல்லாமல், திமுக தனது கொள்கைகளை விட்டுக்கொடுத்து, குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்றுவதற்காக இதுபோன்ற நிலைக்குச் செல்வது வேதனை அளிக்கிறது.
எந்த அழுத்தத்திற்கும் இந்த அரசு அல்லது முதலமைச்சர் பணியும் சூழல் ஒருபோதும் ஏற்படாது. தேர்தலுக்கு முன்போ அல்லது எந்த நேரத்திலோ அழுத்தம் வந்தாலும், அதற்கு நாங்கள் பயந்ததில்லை. காவிரிப் பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் பேசியுள்ளோம்.
காவிரிப் பிரச்சனைக்காக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படவில்லை என்ற காரணத்திற்காக, தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணிக்க முடியுமா? இது மிக முக்கியமான விஷயம் இல்லையா? இந்த முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு கூட்டத்தில் கலந்துகொண்டிருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
