வணக்கம் நேயர்களே! MDTV 24×7 உங்களை அன்புடன் வரவேற்கிறது. இந்த வாரத் தொடக்கத்தில் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இல்லையென்றாலும், வெள்ளி விலை திடீரென உயர்ந்துள்ளது.
கடந்த வாரம்தான் மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிரடியாக உயர்த்தியது. இந்த வரி உயர்வால் தங்க, வெள்ளி விலைகள் கடுமையாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர். அதன் எதிரொலியாக, கடந்த வார இறுதியில் தங்கமும் வெள்ளியும் கணிசமாக உயர்ந்தன. வார இறுதியில், ஒரு கிராம் தங்கம் ரூ.14,750 ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000 ஆகவும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.14,750-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000-க்கும் விற்பனையாகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
ஆனால், வெள்ளி விலையில் தான் இன்று பெரும் ஏற்றம் காணப்படுகிறது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் வெள்ளி விலை உயர்வு நகை வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.