MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தங்கக்காசு மோசடி: மகளிர் காவல் ஆய்வாளர் கைது!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தங்கக்காசு மோசடி: மகளிர் காவல் ஆய்வாளர் கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தங்கக்காசு மோசடி: மகளிர் காவல் ஆய்வாளர் கைது!

தமிழ்நாடு

தங்கக்காசு மோசடி: மகளிர் காவல் ஆய்வாளர் கைது!

Admin
Last updated: ஜூலை 7, 2026 11:00 காலை
Admin
Share
சென்னை ராயபுரம் மகளிர் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி கைது செய்யப்பட்டார்
தங்கக்காசு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மகளிர் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி.
SHARE

சென்னை ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய ஷீலா மேரி, குறைந்த விலையில் தங்கக்காசு மற்றும் வீட்டு மனை வாங்கித் தருவதாக காவலர்களின் குடும்பத்தினரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் இவர், ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக ஷீலா மேரி பணியாற்றியபோது, அவரது ஓட்டுநர் பிரபு மணியுடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 'குறைந்த விலைக்கு தங்கக்காசு வாங்கித் தருகிறோம்' என்ற ஆசைவார்த்தையைக் கூறி காவலர்களிடம் பணம் வசூலித்துள்ளனர். ஆரம்பத்தில் சிறிய தொகையைக் கொடுத்து தங்கக்காசு வாங்கிய காவலர்கள், பின்னர் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளனர். கொடுங்கையூர் பகுதியில் அலுவலகம் நடத்தி வந்த பிரபு மணி, காவலர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு, கூறியபடி தங்கக்காசுகளையோ அல்லது பணத்தையோ திருப்பித் தராமல் தலைமறைவானார்.

இந்த மோசடி திட்டத்தில் பெண் ஆய்வாளர் ஷீலா மேரி உடந்தையாக இருந்ததும், இதற்காக அவருக்குக் குறிப்பிட்ட கமிஷன் தொகையும் வழங்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட காவலர்கள் இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், மோசடிக்கு உடந்தையாக இருந்த பிரபு மணியை போலீஸார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, சுமார் 20 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ய உதவியதாகக் கூறப்படும் ராயபுரம் பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியை, கடந்த ஜூன் 15-ஆம் தேதி வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஷீலா மேரி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு சென்னையில் வைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ஷீலா மேரியை அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ChennaiEconomic Offences WingGold Coin FraudPrabhu ManiSheela MaryWoman Inspectorசென்னைதங்கக்காசு மோசடிபிரபு மணிபொருளாதார குற்றப்பிரிவுமகளிர் காவல் ஆய்வாளர்ஷீலா மேரி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு நீலகிரி: கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் பள்ளிகளுக்கு விடுமுறை
Next Article தங்கம் விலை குறைவு குறித்த செய்தி தங்கம் விலை சரிவு: சவரனுக்கு ரூ.2,400 குறைந்தது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி உண்டியலில் ரூ.4.72 கோடி குவிந்தது: பக்தர்கள் நீண்ட வரிசை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4.72 கோடி வசூலானது. கோடை…

ஜூலை 8, 2026

மத்தியபிரதேசத்தில் கிணற்றில் 13 மான்கள் உயிரிழப்பு: விசாரணை தீவிரம்

மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு கிணற்றுக்குள் 13 மான்கள்…

ஜூலை 8, 2026

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ்…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ புத்தகத்தை விஜய்க்கு பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மரியாதை நிமித்தமாக மூத்த அரசியல் கட்சிகளை தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சட்டசபையில்…

1 Min Read
தமிழ்நாடு

இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு நடிகர் சிரஞ்சீவி இரங்கல்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவுக்கு நடிகர் சிரஞ்சீவி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கோவாவில் நடந்த குஷ்பு மகள் திருமணத்தில் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் மற்றும் உரையாடல்களை அவர் நினைவு…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், முதல்வர் விஜய்யின் முயற்சிக்கு பாராட்டு என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

0 Min Read
சென்னையில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகாத செந்தில் பாலாஜி
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி, சகோதரருக்கு மீண்டும் சம்மன்: போலீஸ் திட்டம்

முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக் குமாருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப போலீஸ் திட்டமிட்டுள்ளது. ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?