MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்கு பதிவு: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்கு பதிவு: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்கு பதிவு: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்கு பதிவு: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

Admin
Last updated: ஜூன் 25, 2026 11:04 காலை
Admin
Share
SHARE

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் முன்னாள் பொறியாளர்கள் உட்பட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'அறப்போர் இயக்கம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 20.04.2022 அன்று அவர் அளித்த மனுவில், மார்ச் 2022-ல் கரூர் மற்றும் பிற பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இணைந்து, எந்தப் பணியும் செய்யாமலேயே பொதுப் பணத்தை முறைகேடு செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக, திருப்பூர் கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்டத்தில், கரூர் உபகோட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக 'சங்கரானந்த் இன்ஃப்ரா' நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுமார் ₹7 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில், எந்த சாலையும் அமைக்கப்படாத நிலையில், 2022 மார்ச் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் ₹3.23 கோடி நிதி முறைகேடாக விடுவிக்கப்பட்டதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக ஏற்கனவே கரூரைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்டப் பொறியாளர் கண்ணன் உட்பட 4 அதிகாரிகளும், ஈரோடு நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள் பிரிவைச் சேர்ந்த கோட்டப் பொறியாளர் நிதிலன் உட்பட 5 அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முறைகேடு வெளிச்சத்திற்கு வந்ததும், குற்றத்திற்கான ஆதாரங்களை அழிக்கும் நோக்கில், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் கூட்டுச் சேர்ந்து இரவோடு இரவாக அவசர அவசரமாக சாலை அமைக்க முயன்றதாக புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கத்தின் புகாரைத் தொடர்ந்து, அரசு (பொதுத் துறை) கடந்த 23.06.2026 அன்று அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகம் (V&AC Headquarters Crime No.3/2026) ஜூன் 24, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Corruption CaseTamil Nadu Politicsஊழல் வழக்குஎ.வ.வேலுதமிழ்நாடு அரசியல்லஞ்ச ஒழிப்புத்துறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்ட நாள் – நயினார் நாகேந்திரன் பதிவு
Next Article காரைக்குடி மாநகராட்சியில் திரிஷா படம் வைக்க சுயேச்சை கவுன்சிலர் அமர்க்களம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

ஆகஸ்ட் 21, 2026

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

டாஸ்மாக் கடை அல்லது மதுபான பாட்டில்கள்
தமிழ்நாடு

டாஸ்மாக்: அனைத்து சப்ளையர்களுக்கும் சம ஒதுக்கீடு உத்தரவு

டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானப் பங்கீட்டை சமமாக வழங்க புதிய உத்தரவு. அனைத்து சப்ளையர்களுக்கும் பிராந்தி, ரம், பீர் சம ஒதுக்கீடு. 7 முன்னோடி மாவட்டங்களுக்கு சிறப்பு விதிமுறைகள்.

2 Min Read
தமிழ்நாடு

புதிய டிசைனில் பொங்கல் வேட்டி, சேலை: ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்!

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு புதிய டிசைனில் வேட்டி, சேலைகளை வழங்குகிறது. இதற்காக ரூபாய் 300 கோடி முன்பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகளின் கைரேகை…

2 Min Read
சென்னை குடிநீர் வாரிய அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

சென்னை குடிநீர் வாரியம்: மண்டலம் 9, 13-ல் கழிவுநீர் உந்து நிலையங்கள் இயங்காது

சென்னை குடிநீர் வாரியம், மண்டலம் 9 மற்றும் 13-ல் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது என அறிவித்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

1 Min Read
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?