சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க ஒரு குறிப்பிட்ட உணவுப் பட்டியலை பின்பற்றுவது அவசியம். இந்த பதிவில், சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய முக்கிய உணவுகள் குறித்து விரிவாகக் காண்போம்.
அரிசி உணவுகளை அதிகமாக உட்கொள்வது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். இருப்பினும், சிவப்பு அரிசி, மட்டை அரிசி, கைக்குத்தல் அரிசி போன்றவற்றை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். பாலில் காய்ச்சப்பட்ட கஞ்சிகளை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் பால் சர்க்கரை அளவை உயர்த்தும். சிறுதானியங்களை தனியாக வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது. ஓட்ஸ் மற்றும் சிறுதானியங்களை பாலில் கலந்து குடிப்பதை தவிர்க்க வேண்டும், இதுவும் ரத்த சர்க்கரை அளவை உயர்த்திவிடும்.
வெளியில் செல்லும் போது பழச்சாறுகள் அருந்துவதை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். செயற்கையாக தயாரிக்கப்பட்ட பழஜூஸ்கள் ரத்த சர்க்கரை அளவை கணிசமாக உயர்த்திவிடும். எண்ணெய்யில் பொரித்த உணவுகளான வடை, சமோசா, பக்கோடா போன்றவற்றை அறவே தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
மேலும், பரோட்டா, பப்ஸ் போன்ற பேக்கரி உணவுகளையும் சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது அவசியம். மைதாவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் இருப்பதால், இது சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே, இந்த வகை உணவுகளை தவிர்ப்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.