பருவநிலை மாறும்போது சளி, காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகள் ஏற்படுவது சகஜம். இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சத்தான உணவுகளை உட்கொள்வது அவசியம். இந்த பதிவில், பருவகால நோய்களிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
மருத்துவர்களின் பரிந்துரைப்படி, நமது உணவுத் தட்டில் வானவில்லின் அனைத்து வண்ணங்களும் இருப்பது நல்லது. பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள பல்வேறு வைட்டமின்கள் உடலுக்கு நன்மை பயக்கும். குறிப்பாக, கீரை மற்றும் குடைமிளகாய் போன்ற பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.
ஆரோக்கியமான வாழ்விற்கு, மனதையும் உடலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். சளி, ஜலதோஷம் போன்ற வைரஸ் தொற்றுகள் பெரும்பாலும் வெளியில் இருந்துதான் உடலுக்குள் நுழைகின்றன. எனவே, பருவகால நோய்த்தொற்று காலங்களில் சிறந்த சுகாதாரத்தைப் பேணுவது முக்கியம். நோய்த்தொற்றைத் தடுக்க உங்கள் கைகளைத் தொடர்ந்து கழுவ வேண்டும், தினமும் குளிக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
தினசரி சமையலில் மிளகைச் சேர்த்துக்கொள்வது நோய்த்தொற்றைத் தடுக்க உதவும். ஆம்லெட், ரசம், குழம்பு என எதில் சேர்த்தாலும் மிளகு ஆரோக்கியம் தரும். உங்களுக்கு சளி பாதிப்பு ஏற்படுவது போன்ற உணர்வு இருந்தால், இரண்டு மிளகை வாயில் போட்டு, சுடுதண்ணீர் பருகினால் போதுமானது. இது எளிமையான மற்றும் பயனுள்ள தீர்வாகும்.