சிறந்த தூக்கத்திற்கு உதவும் அற்புத பருப்புகள் மற்றும் பழங்கள்!

நல்ல உறக்கம் என்பது ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். போதிய தூக்கமின்மை மன அழுத்தத்தையும், பல்வேறு நோய்களையும் உண்டாக்கும். இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு காண, நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த பதிவில், ஆழ்ந்த உறக்கத்தை ஊக்குவிக்கும் சில அற்புத உணவுகளைப் பற்றி காண்போம்.

பாதாம் பருப்பில் மெலடோனின் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை இரண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றன. எனவே, தூங்கும் முன் சில பாதாம் பருப்புகளை உட்கொள்வது நல்ல தூக்கத்தைப் பெற உதவும். வான்கோழியில் புரதம் மற்றும் டிரிப்டோபான் அதிகமாக உள்ளது. இவை உடலுக்கு சோர்வை ஏற்படுத்தி, நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கும்.

சாமந்தி டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகின்றன. கிவி பழத்திலும் செரோடோனின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை தூக்கத்தின் தரத்தை உயர்த்தி, நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கும். செர்ரி சாறில் மெலடோனின் ஹார்மோன் இருப்பதால், இது நல்ல இரவு தூக்கத்தைத் தூண்டுகிறது.

மீன் சாப்பிடுவதும் தூக்கத்திற்கு உதவும். மீன்களில் உள்ள வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகின்றன. வால்நட் பருப்புகளும் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கின்றன. இவற்றில் உள்ள மெலடோனின் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆழ்ந்த உறக்கத்திற்கு துணைபுரிகின்றன.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version