MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மனைவிக்கு பயந்து மண்ணில் புதைத்த ரூ.5 லட்சம்: கறையான் அரித்ததால் அதிர்ச்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மனைவிக்கு பயந்து மண்ணில் புதைத்த ரூ.5 லட்சம்: கறையான் அரித்ததால் அதிர்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மனைவிக்கு பயந்து மண்ணில் புதைத்த ரூ.5 லட்சம்: கறையான் அரித்ததால் அதிர்ச்சி

தமிழ்நாடு

மனைவிக்கு பயந்து மண்ணில் புதைத்த ரூ.5 லட்சம்: கறையான் அரித்ததால் அதிர்ச்சி

Fernandez
Last updated: ஆகஸ்ட் 10, 2026 6:54 காலை
Fernandez
Share
கறையான் அரித்த ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருக்கும் விவசாயி
கறையான் அரித்த ரூபாய் நோட்டுகளைக் காட்டும் விவசாயி மங்கிலால் மேக்வால்
SHARE

தனது மனைவிக்குத் தெரியாமல் ரூ.5 லட்சத்தை நிலத்தில் புதைத்து வைத்த விவசாயி, பணத்தை தேடி ஓராண்டு அலைந்து, இறுதியில் கறையான் அரித்த நிலையில் கண்டெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ரா பகுதியைச் சேர்ந்த மங்கிலால் மேக்வால் என்ற விவசாயி, கடந்த ஆண்டு தனது நிலத்தை ரூ.5 லட்சத்திற்கு விற்றுள்ளார். இந்த பணத்தை வைத்து தனது நிலத்தில் ஒரு அறை கட்ட திட்டமிட்டுள்ளார். ஆனால், தனது மனைவிக்குத் தெரியாமல் பணத்தை பாதுகாப்பாக வைக்க நினைத்த அவர், பணத்தை பாலித்தின் கவரில் போட்டு, தனது விவசாய நிலத்தில் குழி தோண்டி மண்ணில் புதைத்து வைத்துள்ளார்.

மங்கிலாலுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், பணத்தை புதைத்து வைத்த இடத்தை அவர் மறந்துவிட்டார். பின்னர், அறை கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டபோது, தனது விவசாய நிலத்தில் நீண்ட நாட்களாக பணத்தை தேடி வந்துள்ளார். சுமார் 6 ஏக்கர் நிலத்தை தோண்டி பார்த்தும் பணம் கிடைக்கவில்லை. நாளடைவில், இந்த விஷயத்தை தனது மனைவி மற்றும் மகனிடம் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இதனை நம்பாத அவர்கள், பிறகு மங்கிலாலுடன் சேர்ந்து பணத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இப்படியே ஓராண்டு கடந்து விட்டது.

இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்யும் விதமாக, டிராக்டரை வைத்து நிலத்தை உழுதுள்ளனர். அப்போது, மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் அவர்களின் கண்களில் பட்டுள்ளது. அந்தப் பணத்தை கண்டெடுத்தபோது, அதில் இருந்த 5 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் கறையானால் அரித்து சேதமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ந்து போயினர்.

சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை பச்பத்ராவில் உள்ள வங்கிக்கு கொண்டு சென்று மாற்றுவதற்கு முயன்றபோது, வங்கி நிர்வாகம் அவற்றை மாற்ற மறுத்துவிட்டது. அதற்கு பதிலாக, ஜெய்ப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், இந்தப் பணம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்த நிலையில், மங்கிலால் குடும்பம் மிகுந்த மன உளைச்சலில் தவித்து வருகிறது.

இதற்கிடையே, கறையான் அரித்த ரூபாய் நோட்டுகளைப் பார்த்து மங்கிலால் கண்ணீர்விட்டு அழும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி, பார்ப்போரின் நெஞ்சை உலுக்குகிறது. இந்த சம்பவம், பணத்தை பாதுகாப்பாக வைப்பதில் உள்ள சிக்கல்களையும், எதிர்பாராத விளைவுகளையும் எடுத்துக்காட்டுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கறையான் அரிப்புபச்பத்ராபணத்தை புதைத்தல்பாலோத்ராமங்கிலால் மேக்வால்ராஜஸ்தான்ரூ.5 லட்சம்விவசாயி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடிகர் ஹிப்ஹாப் ஆதி 'மீசைய முறுக்கு 2' பட விழாவில் பேசுகிறார் மீசைய முறுக்கு 2 பட விழா: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஹிப்ஹாப் ஆதி
Next Article கழுத்து கருமையை போக்கும் வீட்டு வைத்திய கலவை கழுத்து கருமையை போக்க எளிய வீட்டு வைத்தியம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போலி ஐஏஎஸ் அதிகாரி மணீஷ் குமார் குப்தா கைது செய்யப்பட்டார்

போலி ஐஏஎஸ் அதிகாரி கைது: ரூ.100 கோடி மோசடி அம்பலம்

பாட்னாவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரகசிய உளவாளி என கூறி…

ஆகஸ்ட் 10, 2026

டெல்லி மாணவர் போராட்டம்: நாடாளுமன்றத்தில் அமித் ஷா பதிலளிப்பார் – கிரண் ரிஜிஜு

டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை…

ஆகஸ்ட் 10, 2026

பள்ளி விடுதியில் பாம்பு கடித்து 3 மாணவிகள் உயிரிழப்பு – விசாரணைக்கு உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பள்ளி விடுதியில்…

ஆகஸ்ட் 10, 2026

காவிரி நீர் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் வரும் 13ம் தேதி விசாரணை

காவிரி நீரை நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வாதாரம்…

ஆகஸ்ட் 10, 2026

கேரளா பெயர் மாற்றம் உட்பட 4 மசோதாக்கள் மக்களவையில் அறிமுகம்

கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவது உட்பட…

ஆகஸ்ட் 10, 2026

You Might Also Like

ரயில் தண்டவாளப் பணி நடைபெறும் காட்சி
தமிழ்நாடு

ஈரோடு வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தம்

ஈரோடு வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள், மகுடஞ்சாவடி - வீரபாண்டி இடையே தண்டவாளப் பணி காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் சிரமம்.

1 Min Read
ஆஸ்திரேலியாவிலிருந்து தமிழகம் திரும்பிய 3 பழமையான சிலைகள்
தமிழ்நாடு

ஆஸ்திரேலியாவிலிருந்து தமிழகம் திரும்பிய 3 பழமையான சிலைகள்

ஆஸ்திரேலியாவிலிருந்து கடத்தப்பட்ட 3 பழமையான சிலைகள் தமிழகம் திரும்பியுள்ளன. மத்திய அரசின் உதவியுடன் இவை டெல்லிக்கு கொண்டு செல்லப்படும்.

1 Min Read
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
தமிழ்நாடு

அழகுமுத்துக்கோன் வீரத்தைப் போற்றுவோம்: சீமான்

மண்ணுரிமைக்காகப் போராடிய மாமன்னர் அழகுமுத்துக்கோனின் வீரத்தைப் போற்றுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். வெள்ளையர்களின் பீரங்கிகளை எதிர்கொண்டபோதும், தனது மண்ணுரிமையைக் காக்க வெள்ளைக்கொடி…

1 Min Read
திருவண்ணாமலை நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கும் காட்சி
தமிழ்நாடு

தங்கச் சங்கிலி பறிப்பு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

திருவண்ணாமலையில் பெண் ஆசிரியரிடம் 5 சவரன் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த வழக்கில், குற்றவாளி பிரேம்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?