பட்டாசுத் தொழில் பாதுகாப்பு: வல்லுநர் குழு விரைவில் – அமைச்சர் கீர்த்தனா

விருதுநகர் வருகை தந்த தமிழக அமைச்சர் கீர்த்தனா, சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், விருதுநகர் அரசு ஆய்வு மாளிகையில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் எஸ்.பி. ஸ்ரீநாதா உள்ளிட்ட அதிகாரிகளால் மலர் கொடுத்து வரவேற்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, அதிகாரிகளுடன் அமைச்சர் கீர்த்தனா முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலை பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்காக, வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றும், அதில் அதிகாரிகள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என மூன்று தரப்பினரும் இடம்பெறுவார்கள் என்றும், அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் சிறந்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், 'இதுவரை இப்படி ஒரு குழு கூட்டம் நடத்தப்படவில்லை. வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் விரைவில் ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படும்' என்றும் அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டார். அமைச்சர்களுக்கான துறைகள் அடுத்த இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும், மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 விரைவில் வரவு வைக்கப்படும் என்றும், மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version