முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் புதிய பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.சி.டி. பிரபாகருக்கும், பேரவைத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ரவிசங்கருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். பல பெரிய ஆளுமைகளால் பெருமைப்படுத்தப்பட்ட இந்த உயர்ந்த பொறுப்பில் அமர்ந்துள்ள இருவரும், அந்தப் பாரம்பரியத்தையும், சட்டமன்றத்தின் மாண்புகளையும் கட்டிக்காக்க வேண்டும்.
ஆளும்கட்சி உறுப்பினர்களைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் வலுவாக ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட இரு தலைவர்களும் அவையை வழிநடத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்.