பொதுவாக பழங்கள் உடலுக்கு நன்மை தரும் என்றாலும், அவற்றை தவறான நேரத்தில் உட்கொண்டால் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். எந்த பழத்தை எந்த நேரத்தில் உட்கொண்டால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த செய்தி அலசுகிறது.
வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், அதில் உள்ள அதிகப்படியான மக்னீசியம் இரத்தத்தில் கலந்து ஆரோக்கிய கேட்டை உண்டாக்கும். மேலும், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இவை அமிலச் சுரப்பை அதிகரித்து, நெஞ்சு எரிச்சல் மற்றும் குடல் புண்ணை ஏற்படுத்திவிடும்.
தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காலையில் பச்சை காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும், அதன் அமிலத்தன்மை காரணமாக நெஞ்செரிச்சல் மற்றும் அடிவயிற்று வலியை உண்டாக்கும். காரமான உணவுகளையும் வெறும் வயிற்றில் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேரும்போது கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, செரிமான கோளாறுகளும் உண்டாகக்கூடும்.
சோடா போன்ற குளிர்பானங்களை வெறும் வயிற்றில் பருகுவது, வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைத்து ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், இது உணவு செரிமானத்தை தாமதப்படுத்தும். எனவே, குளிர்பானங்களை தவிர்ப்பது சிறந்தது.
மாறாக, காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவது உடல் எடையைக் குறைக்கவும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.