MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கல்வி கடன் உயர்வு: மாணவர்களுக்கு முதலமைச்சர் அறிவிப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கல்வி கடன் உயர்வு: மாணவர்களுக்கு முதலமைச்சர் அறிவிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கல்வி கடன் உயர்வு: மாணவர்களுக்கு முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழ்நாடு

கல்வி கடன் உயர்வு: மாணவர்களுக்கு முதலமைச்சர் அறிவிப்பு!

Fernandez
Last updated: ஜூலை 18, 2026 8:31 காலை
Fernandez
Share
கல்வி கடன் திட்டம் குறித்து அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
கல்வி கடன் திட்டம் குறித்து அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
SHARE

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கடன் உச்ச வரம்பு அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் மற்றும் கடன் வசதிகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். மாணவர்களுக்கு கல்விக்கடன் சரியான முறையில் கிடைக்கிறதா, பெற்றோர்கள் வங்கிகளில் அலைக்கழிக்கப்படுகிறார்களா, வங்கி ஊழியர்கள் பெற்றோர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குகிறார்களா போன்ற விவரங்கள் முதலமைச்சரிடம் விவாதிக்கப்பட்டன.

முன்னதாக, 4 லட்சம் ரூபாய் வரை தகுதி உள்ள மாணவர்களுக்கு, பெற்றோர் அல்லது சம்பந்தப்பட்டவர்களின் உத்தரவாத கையெழுத்துடன் கல்விக் கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்த கடன் உச்ச வரம்பை 7.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில், மாணவர்களுக்கான கல்விக் கடன் உச்ச வரம்பு உயர்த்தப்பட உள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் 1,02,000 மாணவர்களுக்கு சுமார் 863 கோடி ரூபாய் கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நடப்பாண்டில், 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கல்விக் கடன் தொகை 3000 கோடி ரூபாயை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் நோடல் வங்கிகள் மட்டுமின்றி, ஒரு பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியரும் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் மாணவர்களின் தேவைகளை கேட்டறிந்து, கல்விக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க உதவுவார்கள். இதன் மூலம், எந்த மாணவனும் கல்விக் கடன் கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்படாது என அமைச்சர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு உரிய மரியாதையும், பெற்றோர்களுக்கு வங்கி ஊழியர்கள் மூலம் மதிப்பும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக நியமிக்கப்படும் பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Education Loanhigher educationTamil Nadu Governmentஉயர்கல்விகல்விக் கடன்தமிழக அரசுமுதலமைச்சர்விஸ்வநாதன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article உச்ச நீதிமன்ற கட்டிடம் இலவச அறிவிப்புகளுக்கு எதிரான வழக்கு: அவசர விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு
Next Article காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சி காதல் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: மருத்துவமனையில் சிகிச்சை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கு - உச்ச நீதிமன்றம்

ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாரிற்கும் இடையே உள்ள ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச்…

ஜூலை 18, 2026

சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்: வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி

லடாக்கின் மாநில அந்தஸ்து கோரி 15 நாட்களாக…

ஜூலை 18, 2026

மேற்கு வங்கத்தில் ரயில்-பேருந்து மோதல்: 5 பேர் பலி

மேற்கு வங்க மாநிலம் முர்​ஷி​தா​பாத் பகுதியில் ரயில்வே…

ஜூலை 18, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: மத்திய அமைச்சர் பதவி விலக கோரி போராட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய…

ஜூலை 18, 2026

குஜராத்தில் 5 தீவிரவாதிகள் கைது: நாடு தழுவிய சதி முறியடிப்பு

இந்தியாவில் குண்டுவெடிப்பு நடத்த சதித்திட்டம் தீட்டிய 'ஜெய்ஷ்-இ-முகமது'…

ஜூலை 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருமண வீட்டில் ஒப்பாரி அழலாமா? – தவெக கேள்வி

திருமண நிகழ்ச்சியில் ஒப்பாரி வைத்து அழுவது போல் அரசியல் பேசுவது சரியல்ல என தவெக கட்சி விமர்சித்துள்ளது. சட்டப்பேரவையை சினிமா படப்பிடிப்பு தளம் போல மாற்றிவிட்டதாக எதிர்க்கட்சி…

1 Min Read
தமிழ்நாடு

கானா பாடகர் கொலை: தறிகெட்டு ஓடும் காவல்துறை – இபிஎஸ் கண்டனம்

சென்னையை அடுத்த படப்பையில் கானா பாடகர்கள் பரத், சீனு ஆகியோர் ஹெல்மெட் அணிந்த கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இபிஎஸ் கடும்…

1 Min Read
தமிழ்நாடு

பேருந்தில் செல்ல வேண்டும்: முதல்வர் விஜய்யின் கனவு நனவானது – நடத்துனர் நெகிழ்ச்சி

சென்னை கிளாம்பாக்கத்தில் 300 புதிய பேருந்துகளை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். பின்னர், ஒரு பேருந்தில் பயணம் செய்த அவர், நடத்துனரிடம் 'பேருந்தில் செல்ல வேண்டும்…

1 Min Read
ஜோதிமணி அறிக்கை வெளியிடுதல்
தமிழ்நாடு

மருத்துவக் கட்டமைப்பு சரியான கைகளில் உள்ளது – ஜோதிமணி

கரூர் மக்களின் சிரமங்களை அமைச்சர் புரிந்துகொண்டதாகவும், தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு சரியான கைகளில் இருப்பதாகவும் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?