முதல்வர் விஜய் இன்று சென்னை கிளாம்பாக்கத்தில் 300 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் கடந்த மூன்று நாட்களாக நிகழ்ச்சி நடைபெறாததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின்னர், முதலமைச்சர் விஜய் பெரம்பூர் செல்லும் 29A வழித்தட புதிய பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, அவரே சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் எடுத்ததுடன், நடத்துனரை அருகில் அமரச் சொல்லி அவருடன் உரையாடியபடி பயணித்தார். இதுகுறித்து பேருந்து நடத்துனர் கூறுகையில், 'பேருந்தில் செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது இன்று நனவாகியுள்ளது' என்று முதலமைச்சர் விஜய் கூறியதாக தெரிவித்தார். மேலும், 'முதலமைச்சர் சார் எங்க பஸ்ல வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நான் அவருக்கு நன்றி சொன்னேன்' என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். போக்குவரத்துத் துறையில் 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதாகவும், முதல்வரே பேருந்தில் பயணித்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் நடத்துனர் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் உட்பட அனைவரும் டிக்கெட் எடுத்தனர்.
You Might Also Like
பெட்டிக்கடையில் 9 கிலோ போதைப்பொருள்: உரிமையாளர் கைது!
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் இன்று அதிரடி சோதனை நடைபெற்றது.போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில்…
கூடங்குளம் மக்கள் மீதான வழக்குகள்: வேல்முருகன் கேள்வி
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முடிவுக்கு கொண்டுவருவதில் உள்ள தடைகள் என்ன என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்…
பேரவையில் பதுங்கும் முதல்வர் விஜய் – திமுக கடும் விமர்சனம்
சட்டப்பேரவையில் நேரலை நிறுத்தப்பட்டது குறித்தும், அமைச்சர்கள் பதிலளிக்காதது குறித்தும் திமுக விமர்சித்துள்ளது. முதலமைச்சர் விஜய் பேரவையில் பதுங்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச்…