தமிழ்த் திரையுலகம் தனது ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்து துயரத்தில் ஆழ்ந்துள்ளது. பிரபல இயக்குநர் பாக்யராஜ் அவர்களின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராகவும், அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாகவும், சிக்கலான சூழலையும் எளிய வசனங்களில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள். தன்னைப்போலவே பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர் அவர். சில மாதங்களுக்கு முன்புதான், திரு. பாக்யராஜ் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் ஆற்றலையும் வாய்ப்பையும் பெற்றிருந்த அவர், திடீரென தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு என ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்து வாடும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ், மகன் சாந்தனு, மகள் சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தமது படைப்புகளால் திரு. பாக்யராஜ் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாக என்றென்றும் வாழ்வார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.