MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பெண்கள் மீது அவதூறு: ஈபிஎஸ்ஸை விளாசிய சி.வி.சண்முகம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பெண்கள் மீது அவதூறு: ஈபிஎஸ்ஸை விளாசிய சி.வி.சண்முகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பெண்கள் மீது அவதூறு: ஈபிஎஸ்ஸை விளாசிய சி.வி.சண்முகம்

தமிழ்நாடு

பெண்கள் மீது அவதூறு: ஈபிஎஸ்ஸை விளாசிய சி.வி.சண்முகம்

Fernandez
Last updated: ஜூலை 29, 2026 4:11 மணி
Fernandez
Share
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
விழுப்புரம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
SHARE

ஆட்சி மாறிவிட்டாலும், காட்சிகள் மாறவில்லை என விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பெண்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதாகவும், இதற்கு அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி துணை நிற்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விழுப்புரத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

தனது மீது தொடர்ந்து அவதூறுகள் பரப்பப்படுவதாக அதிமுக மாவட்டச் செயலாளர் பசுபதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். செஞ்சி காவல் நிலையத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் முறையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மயிலம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், "எனக்கும் ஈபிஎஸ்ஸுக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். என் மீது நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அதிமுகவில் உள்ள பெண்கள் மீது சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வருவதை நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த நிலையை ஜெயலலிதா இருந்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டார். இவை அனைத்தையும் மக்களும் அதிமுக தொண்டர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அம்மாவை நம்பி வந்த பெண்களை தரக்குறைவாக அவமானப்படுத்தி செய்திகளை பரப்புகின்ற நபர்களை ஊக்குவிக்கின்ற தலைமை.. எடப்பாடி பழனிசாமி அவர்களே இது உங்களுக்கு அழகா..? ஏன் உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா..? நியாயமா இதெல்லாம்..? இது தான் நீங்கள் கட்சி நடத்தும் லட்சணமா..? இந்நேரம் அம்மா இருந்திருந்தால் உங்கள் நிலைமை என்னவாயிருக்கும்? இதை காவல்துறை வேடிக்கை பார்ப்பதா..? நல்லாட்சி தர வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார். ஆனால், அவருக்குக் கீழேயுள்ள அலுவலர்கள் மாறவில்லை. காட்சி மாறிவிட்டது, ஆட்சி மாறிவிட்டது, ஆனால் அதே படம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. விழுப்புரத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றுகிறார்கள். பலமுறை புகார் அளித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று அவர் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKCV ShanmugamEdappadi PalaniswamiVillupuramஅதிமுகஎடப்பாடி பழனிசாமிசமூக வலைதளம்சி.வி.சண்முகம்பெண்கள் பாதுகாப்புவிழுப்புரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெறும் காவிரி நீர் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் காவிரி நீர் திறப்பு: கர்நாடகா முதல்வர் திடீர் ஆலோசனை
Next Article தாஜ்மஹாலைக் காட்டும் படம் தாஜ்மகாலில் குரங்கு கடித்ததில் தென்கொரிய சுற்றுலாப் பயணிக்கு காயம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பெங்களூரில் காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர்

காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு: பெங்களூரில் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் கைது

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பை எதிர்த்து பெங்களூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாட்டாள் நாகராஜ்…

ஜூலை 29, 2026

வந்தே மாதரம் அவமதிப்பு: 3 ஆண்டு சிறை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள்…

ஜூலை 29, 2026

விவசாயிகள், மாணவர்கள் மோடி அரசை நெருக்குவார்கள்: சிஜேபி நம்பிக்கை

விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஒரு…

ஜூலை 29, 2026

குரல் வாக்கெடுப்பில் தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் முக்கிய தேர்தல்…

ஜூலை 29, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா, பொதுத் தேர்வுகள்…

ஜூலை 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அண்ணாமலை புதிய இயக்கம்: த.வெ.க. வளர்ச்சிக்கு சவாலா?

பா.ஜ.க.வில் இருந்து விலகி அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கியுள்ளார். இது, நடிகர் விஜய்யின் த.வெ.க. ஆட்சிக்கு சவாலாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த தேர்தலில் இருவருக்கும்…

2 Min Read
தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி போதைப்பொருள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகமது அலி என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

1 Min Read
போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணை
தமிழ்நாடு

17 வயது சிறுமிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு

17 வயது சிறுமிக்கு திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

இயக்குநர் கே.பாக்கியராஜ் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

இயக்குநர் கே.பாக்கியராஜ் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. பல இயக்குநர்களை உருவாக்கியதில் அவர் முக்கியப் பங்காற்றியதாக அக்கட்சி கூறியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?