கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் பகுதியில் நேற்று மாலை பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. மாசிமகம் நடைபெறும் இடத்திற்கு அருகே, பெரியார் ஆர்ட்ஸ் கல்லூரியில் பயிலும் மூன்று மாணவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இடி மின்னல் தாக்கியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, ஹரிகரன் என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த இடி தாக்குதலில் ஹரிகரன் என்ற மாணவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர தாக்குதலில் அவரது உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த மின்னல் தாக்குதலின் தாக்கத்தால் அவருடன் இருந்த மற்ற இரண்டு மாணவர்களும் பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்த மாணவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூரில் இன்று காலை முதலே பலத்த இடி மின்னலுடன் கூடிய சாரல் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திடீரென ஏற்பட்ட இந்த இடி மின்னல் தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்த மாணவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.