MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கோவையில் சிறுமி கொடூர கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோவையில் சிறுமி கொடூர கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!

தமிழ்நாடு

கோவையில் சிறுமி கொடூர கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!

Admin
Last updated: மே 23, 2026 5:08 மணி
Admin
Share
SHARE

கோவையில் 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சூலூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டது மனிதநேயமற்ற செயல் என எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்கு தாங்கள் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் பதிவு செய்வதாக அவர் கூறியுள்ளார்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில் ஏற்படும் தாமதம், சட்ட சலுகைகள் போன்றவை குற்றவாளிகளுக்கு தைரியத்தை அளித்து, இது போன்ற கொடூரங்கள் தொடர்கதையாக காரணமாகின்றன. வெறும் சட்ட புத்தகங்களால் குற்றங்களை தடுத்துவிட முடியாது. சமரசமற்ற கடுமையான நடவடிக்கைகள், காலதாமதமற்ற விரைவான புலனாய்வு, உறுதியான அதிரடித் தண்டனை ஆகியவை மட்டுமே இது போன்ற காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்டை வீட்டாரே இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருப்பது, நம் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழலை உணர்த்துவதாகவும், தமிழகம் பெண்களுக்கும், பிஞ்சு பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிவருவது மிகுந்த அச்சத்தையும் வேதனையையும் அளிப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனவே, தமிழக அரசும், காவல்துறையும், நீதித்துறையும் இணைந்து இந்த விஷயத்தில் உடனடியாகவும் உறுதியாகவும் தலையிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரித்து, எவ்வித சலுகையும் இன்றி, மற்றவர்களுக்கு பாடமாய் அமையும் வகையில் மிக கடுமையான தண்டனை விரைவாக பெற்றுத்தரப்பட வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். வெற்று வார்த்தைகளால் ஆறுதல் கூறுவதை நிறுத்திவிட்டு, இனி ஒரு பெண் குழந்தைக்குக்கூட இத்தகைய கொடூரம் நிகழ கூடாது என்கிற அடிப்படையில் தமிழக அரசும், நீதித்துறையும் போர்க்கால அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எஸ்டிபிஐ கட்சி துணை நிற்கும் என்றும் முகம்மது முபாரக் உறுதியளித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:coimbatoreTamil Nadu Newsஎஸ்டிபிஐ கட்சிசிறுமி கொலைசிறுமி பாதுகாப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவை சிறுமி கொலை: விரைந்து தீர்ப்பளிக்க ராமதாஸ் கோரிக்கை
Next Article தரவுகள்தான் இன்றைய உலகின் சொத்து: மாபெரும் திருட்டு திரைப்படம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வி.பி.சிங்குக்கு உண்மையான மரியாதை சமூகநீதியே – அன்புமணி

மத்திய, மாநில அரசுகளில் 100 சதவீத சாதிவாரி இடப்பங்கீடு இலக்கை அடைவதே லட்சியம் என்றும், இதுவே வி.பி.சிங்குக்கு செலுத்தும் உண்மையான மரியாதை என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

பாக்யராஜ் இறுதி ஊர்வலத்திற்கு உதவிய அரசுக்கு சரத்குமார் நன்றி

திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் சிறப்பாக நடைபெற உதவிய தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் நடிகர் சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

MBBS, BDS படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்..!

MBBS, BDS படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று மதியம் 12 மணி முதல் www.tnmedicalselection.org இணையதளத்தில் தொடங்குகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின் விண்ணப்ப…

1 Min Read
தமிழ்நாடு

51,000 இளைஞர்களுக்கு அரசு பணி: மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல்.முருகன், நாடு முழுவதும் 51,000 இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமனக் கடிதங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?